அனன்யா பாப்பா, நீ எங்கே இருந்து வந்திருக்கே?
கொட்டிவாக்கத்தில இருந்து
உனக்கு அகில் அண்ணாவை ரொம்ப பிடிக்குமா?
ஆமா ரொம்ப பிடிக்கும்
அகில் அண்ணா உன்னை ஆசையா வைச்சு இருக்கானா?
ஓ
உங்க அப்பா எங்கே போய் இருக்காரு?
ஆஸ்ட்ரேலியா
எதுக்கு போயிருக்கறாரு கண்ணா?
மனம் சம்பாதிக்க, அது மனம் இல்லைப்பா, பணம், குடும்பத்தில குழப்பதை உண்டாக்காதே
நீ பெரிசான எந்த ஸ்கூலுக்கு போகப் போற?
ஹெட்ஸ்டார்ட்
உனக்கு அந்த ஸ்கூல் புடிச்சு இருக்கா?
ஓ புடிச்சு இருக்கே…
பிறந்து ஒன்றரை மாதம் ஆன அனன்யா இவ்வளவு பதில் சொன்னா என்று நினைச்சீங்களா என்ன? முதல் கேள்வி நான் அனன்யாவை கொஞ்சுவதற்க்காக கேட்டது, பதில் அகிலுடையது, மீதி கேள்விகளை சும்மா டெவலப் பண்ண குழந்தைக்கு மவுத்பீஸாகி அகில் சொன்ன பதில்கள்தான் அவை.
ஜெயா.
Categories: Akhil · ananya
Tagged: children questions, question answers
அனன்யா வந்த பிறகு அகிலின் ரியாக்ஷ்ன்களை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கின்றேன், எழுத ஆரம்பித்தால் ரொம்ப பெரியதாக போகும் போல இருக்கவே தள்ளிப் போய்க் கொண்டு இருக்கின்றது. சீக்கிரம் எழுதுகிறேன்… இப்போதைக்கு சொல்ல வந்த சின்ன விஷயம் என்ன என்றால், இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தை தனக்கு கிடைத்துக் கொண்டு இருந்த அன்பின் அளவு குறைந்து விடும் என்று எண்ணிக் கொள்ள ஆரம்பித்து விடும். பெரியவர்கள் வேண்டுமென்றே வித்தியாசம் பாராட்ட வில்லை என்றாலும் சிறு சிறு நிகழ்ச்சிகளில் அப்படி தோன்றி விட வாய்ப்பு இருக்கின்றது.
அகில் அப்படி யோசிப்பதற்க்கு முன்னால் ப்ரோஅக்டிவாக நானே என்ன சொல்லிக் கொண்டு இருக்கின்றேன் என்றால், “அகில், பாப்பா வந்த பிறகு உன் மேல் அன்பு ரொம்ப அதிகமாகி விட்டது. உன்னை பார்த்தாலே ஆசை ஆசையாக இருக்கின்றது… ” அதுவும் ஆசையாக வந்து மடியில் உட்கார்ந்து கொள்ளுகிறது. சாதாரணமாக திட்டு வாங்கும் குறும்புகளை கூட இப்போது எல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறேன். டி.வி பார்ப்பது அதிகமாகி இருக்கின்றது. பாப்பா வந்ததால தன்னுடைய வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை என்று அது உணராத அளவிற்க்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. ஒரு 60% வெற்றியும் கண்டு இருக்கின்றேன் என்று தோன்றுகிறது. ஆனால் அனனயாவிற்கு பால் கொடுக்கும் நேரங்களும், அது அழும் நேரங்களும், அதை தூங்க வைக்கும் நேரங்களையும் தவிர்க்க முடிவதில்லை, அப்போது எல்லாம் டி.வி அல்லது வீட்டில் இருக்கும் வேறு யாராவது அகிலை மேய்க்கிறார்கள்.
பாதி நேரம் அகில் பள்ளியில் கழித்து விடுவதாலும், பாதி நேரம் அனன்யா தூக்கத்தில் இருப்பதாலும் என்னுடைய வண்டி பெரிதாக ஆட்டம் காணாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது…
ஜெயா.
Categories: Akhil · ananya
Tagged: equal importance to children, second child, treating both the childs
எங்கிருந்து அகில் இரண்டு விரல் நீட்டி, இரண்டு விஷயங்களை சாய்ஸ்ஸாக வைத்து, அதில் எதையாவது தொடவைக்கும் பழக்கத்தை கற்றுக் கொண்டது என்று தெரியவில்லை, இரண்டு விரல்லிலும் அதற்கு இஷ்டமானதையே வைத்துக் கொள்ளுவது தான் ஹைலைட்.
அம்மா, இது வந்து ஸ்கூலுக்கு போகாம இருக்கறது, இது வீட்டிலேயே இருக்கறது? இதுல எது வேணும்?
இது எப்படி இருக்கு?
ஜெயா.
Categories: Akhil
அகிலுக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை வாங்குவது ஒன்றும் புதிதல்ல… அப்படிப் பார்த்தால் எனக்கே புதிதல்ல. எப்போதும் உட்கார்ந்த இடத்தில் இருந்து தண்ணீர் கேட்பது, புத்தகம் எடுத்துதர சொல்வது எல்லாம் மிகவும் சகஜம். இந்த ஆப்பரேஷன் ஆனதில் இருந்து அது எல்லாம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. சாப்பிட்டு விட்டு, ஒரு கிண்ணம் தண்ணியில் கை கழுவுவதும் வழக்கமாகிவிட்டது. அகிலும் எப்போவாவது இப்படி கை கழுவ தண்ணீர் கேட்டு ஆளை ஏவும், கண்டு கொள்ளாமல் விட்டு விடுவேன்.
இன்று காலை அகில் மும்மரமாக டி.வி பார்த்துக் கொண்டு இருந்தது, அவசரமாக சூ சூ வேறு வந்தது போல, நான் சொன்னேன், “அகில் சூ சூ வருது பாரு, போய்ட்டு வா”
இல்லைமா, வரலை.
இல்லை அகில் வருது பாரு, போ இல்லை என்றால் டி.வி நிறுத்திடுவேன்.
சரிம்மா, ஒரு மக் எடுத்துகிட்டு வா…
எதுக்குடா?
சூ சூ போகறத்துக்கு…
அடிங்க, மரியாதையா எழுந்து ஓடிப்போயிடு…
அடப்பாவி இவன் என்னையும் மிஞ்சிட்டானே அடுத்தவங்களை ஏவறதில..
ஜெயா.
Categories: Akhil · humor
அகில் ஏதாவது குறும்புத்தனம் செய்தால், முடிந்த வரை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவேன், ஆனாலும் சில சமயம் திட்டு வாங்கும். ஆனாலும் கொஞ்ச நேரத்தில் சமாதானம் ஆகி விடுவோம். சமாதானம் ஆன பிறகு, அல்லது கொஞ்ச நேரம் கழித்து நான் சொல்லுவேன், “அகில், அம்மாவிற்க்கு அகிலை ரொம்ப பிடிக்கும், ஆனா இந்த மாதிரி ஏதாவது செய்யும் போது கோபம் வந்திடும், ஆனாலும் அகில் தான் அம்மாவிற்க்கு செல்லம்.”
இன்றைக்கு அகில் என்னிடம் சொல்லியது – “அம்மா நீ அப்போ அப்போ என்னை திட்டினாலும், எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்…”
நேரமடா சாமி
ஜெயா.
Categories: Akhil
தலைப்பை பார்த்தவுடனே ஏதோ பெண்ணுரிமை பதிவு என்று நினைச்சுக்க வேண்டாம்.. அகிலின் தோழி ஜேனின் சந்தேகம் இது:
“அகில் பையன் தானே? அவனுக்கு தம்பிதானே பிறக்கனும், எப்படி தங்கச்சி பாப்பா பிறந்தது? நம்ம வீட்டில தானே தங்கச்சி பாப்பா பிறக்கனும்? எப்படி?”
விடை தெரிந்தவர்கள் பதில் கூறவும். குழந்தையிடம் சொல்லக்கூடியதாகவும், அது ஒத்துக் கொள்ளும் பதிலாக இருக்கவேண்டியது மிக முக்கியம்
ஜெயா.
Categories: General
அனன்யா பிறந்து ஒரு மாதம் ஆகி விட்டது. ரொம்ப தொந்தரவு இல்லை, ஆனாலும் சில நேரங்களில் அழுகை, அழ ஆரம்பித்தால் நிறுத்துவது ரொம்ப கஷ்டமாக இருக்கினந்து. (அய்யோ அப்போ பேச ஆரம்பித்தாலும் நிறுத்தாதா என்று நீங்க அலறரது கேட்குது, என்ன பண்றது? க்கூம்…. தாயைப்போல பிள்ளை என்று பழைய பழமொழி எல்லாம் கமென்ட்ல போட்டு மொக்கை போடாதீங்க)
இன்றைக்கு தரையில் கை காலை உதைத்து விளையாடிக் கொண்டு இருந்த போது தன் கையாலேயே தன்னுடை தலை முடியை பிடித்து அழ ஆரம்பித்தது. எடுத்து விட்டாலும் அடுத்த ஒரு பத்து நிமிடத்துக்கு அதையே திரும்ப செய்து கொண்டு இருந்ததை என்ன சொல்லுவது? கொஞ்ச நேரத்தில் அகிலின் போலி அழுகை சத்தம். அவனும் ஒரு கையால் தன் தலைமுடியை பிடித்து இழுத்து (வலிக்காமல்தான்) அழுவதாக பாவ்லா செய்து கொண்டு இருந்த கொடுமையை பார்த்த போது வருகிற நாட்களை பார்த்தால் பீதியாகதான் இருக்கின்றது
ஜெயா.
Categories: Akhil · ananya
Tagged: Akhil, ananya, baby activities, imitating children, pulling hair
November 3, 2009 · 1 Comment
இப்போதெல்லாம் அகிலை ஸ்கூலுக்கு கிளப்புவது பெரும்பாடாகி வருகின்றது. எழுப்பும் போதே கதைகள் – இன்னைக்கு போகமாட்டேன், நாளைக்கு போகிறேன். எப்போதும் ஸ்கூலை வெறுக்கிற ஆசாமி இல்லை அகில். ஆனாலும் நானும் பாப்பாவும் எப்போதும் வீட்டிலேயே இருக்கும் போது தான் மட்டும் ஏன் போகவேண்டும் என்ற எண்ணத்தால் தான் ஸ்கூலுக்கு போக அவ்வளவாக இஷ்டம் இல்லை. ஓரிரண்டு நாட்கள் அழுது ஆர்ப்பாட்டம், மித்த நாட்கள் அவ்வளவு பெரிய சீன் இல்லை, இருந்தாலும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கின்றது அகிலுக்கு.
ஏன்டா போகமாட்டேன் என்கிறாய், என்றால், பதில் – “பாப்பா ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்ச உடனே நானும் போறேன் மா. அது வரைக்கும் வீட்டிலேயே இருப்பேன்…”
நானோ, ” பாப்பா இன்னும் ஸ்கூல் போக ரொம்ப நாள் இருக்குடா, அது வரைக்கும் நீ ஸ்கூலுக்கு போகலை என்றால், உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் செக்ண்ட் ஸ்டான்டர்ட் போயிட்டு இருப்பாங்க, அப்போ நீ என்ன பண்ணுவே… இத்தனை நாள் ஸ்கூலுக்கு போகலை என்றால் ஆன்ட்டி உன்னை அவங்க கூட உட்கார வைக்க மாட்டாங்க, பாப்பா கிளாஸ்ல எல்லாரும் குட்டியா இருப்பாங்க, நீ என்ன பண்ணுவே” என்றால் பலத்த சிந்தனை தான் பதில். அப்புறம் “சரி பரவாயில்லை, நான் பாப்பாவோடயே போயிக்கிறேன்..”
இப்போதைக்கு எப்படி சமாளித்து இருக்கின்றேன் என்றால் – “அகில், பாப்பா இப்போ ரொம்ப சின்னவளா இருக்கா, கொஞ்ச டைம் வெயிட் பண்ணு, பாப்பா நடந்து, வாயை திறந்து அப்பா, அம்மா, அண்ணா என்று சொல்லட்டும், கப்பென்று கூட்டிகிட்டு ஸ்கூல்ல சேர்த்துடலாம்… இவ்வளவு சின்ன குழந்தையை ஆன்ட்டி சேர்த்துக்க் மாட்டாங்க ஸ்கூல்ல… அது வரைக்கும் நீ மட்டும் போயிட்டு வந்துடு, அப்புறம் நான் உனக்கு ஒரு சைக்கிள் வாங்கி தரேன், அதில நீயும் பாப்பாவும் போங்க. ஆன்ட்டிகிட்டே இப்போவே சொல்லி வச்சிடு, நம்ம பாப்பாவை ஸ்கூல்ல சேர்த்துக்க..”
சரி என்று சொல்லி இருக்கின்றது, அன்றொரு நாள் வேறு ஏதோ பேசிக் கொண்டு இருக்கும் போது – “அம்மா பாப்பா வாயை திறந்து பேசட்டும், ஸ்கூல்ல சேர்த்திடலாம்…” என்று அது எனக்கு ஞாபகபடுத்திக் கொண்டு இருக்கின்றது.
ஜெயா.
Categories: Akhil · General
Tagged: school blues
சாதாரணமாக உங்கள் குழந்தை என்ன ஆகவேண்டும் என்பதை சின்ன வயதிலிருந்தே உட்புகுத்துங்கள், கருவில் இருக்கும் போதே கூட டிரைன் பண்ணலாம் என்று சொல்லுவார்கள். ஏம்பா, கருவில் இருக்கும் குழந்தை நான் இதுவாக போகிறேன் என்று சொல்லுமா என்ன? நம்ம ஆசையை அது மேல திணிக்க வேண்டியது தான்… நீ ஒரு கிரிக்கெட்டரா வரணும், டாக்டராகி ஊருக்கு வைத்தியம் பண்ணனும் என்பது எல்லாம் நம்மளளோட பயாஸ்க்கோப் ஆசைதானே… குழந்தைக்கே விவரம் தெரியும் வயதில தான் அது என்ன ஆக வேண்டும் என்று அதனால் யோசித்து முடிவு எடுக்க முடியும்… ஆனா அந்த வயசு வர்றத்துக்குள்ளே நாம அதை ஒரு பத்து கிளாஸ்ல சேர்த்து, ஒரு பக்கம் விளையாட்டு, ஒரு பக்கம் இசை, ஒரு பக்கம் மூளை வேகமா செயல் படற கிளாஸ் என்று அதை நாலா பக்கமும் பிய்ச்சு எடுத்துடுவோம்… சோ அதோட சுதந்திரத்தை பறிச்சு, நம்ம இஷ்டத்தை தான் அது மேல திணிக்கிறோம். எனக்கு குழந்தைகள் இதைத்தான் பண்ணனும் என்ற ஆசை இல்லை, எது அதுக்கு இஷ்டமோ அதை செய்யட்டுமே என்ற எண்ணம் தான்…
என்னதான் சொன்னாலும் உள்மனசின் ஓரத்தில நம்மால நிறைவேற்றிக்க முடியாத ஆசைகளை மூட்டை கட்டி வைச்சு இருப்போம் இல்லையா, அதுல ஒன்னு ரெண்டு என்ன என்றால்… அகிலை ஒரு பாடகனாக்க வேண்டும். நல்ல கர்னாடிக் இசை சொல்லிக் கொடுத்து பாட வைக்க வேண்டும், கூடவே இரண்டு வாத்தியங்களை வாசிக்கவும் பழக்க வேண்டும். பிரி.கே.ஜி லெயே பாட்டு கிளாஸில் கூட சேர்த்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் ஒரு கட்டத்திற்க்கு கிளாஸ் போர் அடிக்கிறது என்று அழ ஆரம்பிக்கவும் போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன். பிஸினெஸ் மேன் ஆக்கும் ஆசைதான் உங்களுக்கே தெரியுமே… இப்போதைக்கு லிஸ்ட்டில் இன்னொன்று சேர்ந்து இருக்கின்றது – சைன்டிஸ்ட் ஆக்குவது. இப்போது கெமிஸ்ட்ரியில் நோபில் பிரஸ் வாங்கி இருக்கும் ராமகிருஷ்னன், தாமஸ், மற்றும் அடா அவர்களின் கண்டு பிடிப்பை பற்றி படித்ததும், மருத்துவத்திற்க்காக பரிசு வாங்கி இருக்கும் எலிசபெத், கேரோல், மற்றும் ஜேக் அவர்களைப் பற்றி இந்த வார ஜூனியர் விகடனில் படித்ததும் தான் இந்த ஆர்வகோளாற்றிக்கு காரணம் (பின்னே நமக்கு எல்லாம் சாதாரணமாவே இப்படி தோணுமா என்ன?).
நிஜமாகவே இந்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி படித்துக் கொண்டே இருப்பார்கள். தினமும் அதையே தின்று, அதனுடனே தூங்கி, அத்துடனே வாழ்க்கை நடத்துவார்கள். ஒவ்வொரு நாள் கண்டுபிடிப்பும் முழு கண்டுபிடிப்பை நோக்கி எடுத்து வைக்கும் ஒரு சின்ன படியாக இருக்கும், இப்படியாக வாழ்க்கையின் இன்றியமையாத விஷயமாக ஆகி விடும் அவருடைய கண்டுபிடிப்பு. அது வெற்றிகரமாக முடிவதோ இல்லை ஒன்றிற்க்கும் பிரயோஜனமில்லாமல் போகுமோ அது அடுத்த விஷயம்… பேசாமல் அகிலை ஒரு விஞ்ஞானி ஆக்கிவிட்டால் என்ன? இந்த கிளாஸுக்கு போ அந்த கிளாஸுக்கு போ என்று அவன் உயிரையும் வாங்க வேண்டாம்
ஸ்ஸ்ஸ்ஸ் இப்பொதைக்கு நம்ம ஊர்ல விஞ்ஞானி ஆக்க கிளாஸ் எதுவும் இல்லை.
ஆகவே பிற்காலத்தில் அகில் என்று ஒரு இந்தியர்/தமிழர் நோபல் பிரைஸ் வாங்கினா என்னையும் இந்த பதிவையும் நினைச்சுக்கோங்கப்பா…
அனன்யா/அசின் கதை என்ன என்று கேட்கிறீங்களா… மருத்துவமனையில் இருந்து வீடு வந்து பார்த்தா எங்க அம்மா ஒரு கிலோ பாதாம் பருப்பை ஊற வைத்து இருந்தாங்க. சரி பெண் குழந்தை பிறந்ததை கொண்டாட பாதாம் கீர் பண்ணப் போறாங்களோ என்று பார்த்தா, இல்லையாம், குழந்தையோட நிறம் நல்லா வர்றத்துக்காக பாதாம் பருப்பு, குங்கும பூவையும் சேர்த்து மாவு அரைச்சு குளிப்பாட்ட போறாங்களாம்… அடடா ஏற்கனவே குழந்தை என்னைப் போல லட்சனமா இருக்கா (ஹ்ம்ம் சரி சரி…), இன்னும் அசின் / தமன்னா கலருக்கு ஆக்கிட்டாங்க என்றால் சொல்லவே வேண்டாம் போலவே…
ஆனந்த விகடன் அட்டை படத்தில அனன்யா படம் பார்த்தாலும்…. இதே பதிவை நினைச்சுக்கோங்க
ஜெயா.
Categories: General
எப்போதும் போல தீபாவளிக்கு அலுவலகத்தில் கொடுத்த ட்ரை ஃப்ரூட்ஸ் டப்பாவை வீட்டுக் கொண்டு வந்திருந்தேன். அதில் ஆப்ரிகாட் கொட்டைகள் கூட இருந்தது. அகில் அதை பார்த்து என்ன என்று கேட்டவுடன், “இது ஆப்ரிக்காட் காய் டா” (பழம் எப்படி இருக்கும் என்று அவனுக்கு ஏற்க்கனவே தெரியும்) நாம் பழம் சாப்பிடுவோம் இல்லையா, அதனுடைய காய், பழுப்பதற்க்கு முன்னாடி இப்படி இருக்கும், அதையும் சாப்பிடலாம் என்று விளக்கினேன்.
அதை கேட்ட அகில் என்னை கேட்டது – “அப்போ இது ஆப்ரிக்காட்டோட அம்மாவா?” என்று…
ஜெயா.
Categories: Akhil · humor
Tagged: apricot, apricot's mother