சிந்திக்க சில நொடிகள்:
- புத்தகங்களை படித்து முன்னேறியவர்கள் பலர் என்றால், கெட்டு குட்டிச்சுவராவனர்கள் என்று சிலராவது இருக்க வேண்டாமா?
- வாழ்நாளில் எங்கேயாவது திருந்தியவர்கள்/நல்லவர்கள் லிஸ்டில் நம் பெயர் வர முடியுமா?
மேலே உள்ள இரண்டு வரிகளை படித்தாலே தெரிந்திருக்க வேண்டுமே, புத்தங்களை படித்து கெட்டு குட்டிசுவரானவர்கள் பட்டியலில் முதல் இடம் எனக்குத்தான் என்று. புத்தகம் படிக்கும் பழக்கம் சிறு வயதிலே இருந்தே எங்களுக்கு வர காரணம் எங்கள் அப்பாதான். பல புத்தங்கள் வாங்கி கொடுத்து இருக்கின்றார். நினைவு தெரிந்து படித்த முதல் புத்தகங்கள் – அம்புலிமாமா, பூந்தளிர், பாலமித்ரா, கோகுலம், ரத்னபாலா, ராணி காமிக்ஸ் என பல சிறுவர் மலர்கள். கடைக்கு வந்த மறு நிமிடம் எங்கள் வீட்டில் ஒரு பிரதி இருக்கும். அப்பா ஒரு புத்தகமாக வாங்கி வந்தால் வீட்டில் நடக்கும் போராட்டத்தை தவிர்க்கவே பெரும்பாலும் இரட்டை புத்தகங்களாக வாங்கி வருவார். நானும் என் அக்காவும் ஆளுக்குகொரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு செட்டில் ஆனால் முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை படிக்காமல் விடுவதில்லை. புத்தகத்தை மாற்றிக் கொண்டு, அடுத்ததையும் அன்றைய இரவுக்குள் படித்து முடித்து விடுவோம். அம்புலிமாமாவில் வந்த விக்கிரமாதித்யன் வேதாளம் கதைகள், தொடர்கதைகள், பூந்தளிரில் வந்த தந்திரகார மந்திரி, கபீஷ், சுப்பாண்டி, ராணி காமிக்ஸில் வந்த மாயாவியின் சாகஸம் எல்லாம் இன்னும் கூட நினைவில் நிற்கின்றன.
கொஞ்சம் பெரிய பசங்களானவுடன் கை வைத்தது – குமுதம், ஆனந்த விகடன், மங்கையர் மலர். அதில் வந்த சுஜாதாவின் கதைகள், ரா.கி. ரங்கராஜனின் தமிழாக்கம் செய்யப்பட்ட சிட்னி ஷெல்டன் கதைகளும் வந்தவுடன் படிக்கின்ற முதல் விஷயங்கள். லாரா கெமெரூனும், டிரேஸி விட்னியும் தினமும் கனவில் வரும் கதாநாயகிகள் ஆகினர். ஆனந்த விகடனின் பின்னட்டையில் வந்த 3 டி படத்தில் தெரியும் உருவத்தை கண்டுபிடிப்பதே அந்நாளைய சாதனையாக இருந்தது. இன்றைய அளவிற்க்கு சினிமா சார்ந்ததாக இல்லாமல் இருந்ததாக ஞாபகம், தெளிவாக நினைவில்லை. சுஜாதாவின் தூண்டில் கதைகளின் வரிசையில் வந்த கறுப்பு குதிரை கதையை எத்தனை முறை படித்து இருப்பேனோ எனக்கே தெரியவில்லை. அதே போல மங்கையர் மலரில் வந்த ஒரு கதை – ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வருவாள். நிறைய தங்கைகள் உள்ள குடும்பம். அனைவருக்கும் வாழ்க்கையில் வழி காட்ட, தனக்கு குழந்தைகளே வேண்டாம் என முடிவு செய்து, தையல் வேலை எல்லாம் செய்து, அனைவருக்கும் திருமணம் செய்து வைப்பாள். கடைசில ஒரு விஷேஷத்தில் அவளை உறவினர்கள் மலடி என்று கூறி அவமானபடுத்தும் போது, அந்த தங்கைகள் அனைவரும் அவளுக்கு சாதகமாக பேசி உண்மையை கூறி சந்தோஷபடுத்துவார்கள். அந்த தியாக சுடர் கதையை படித்து விட்டு, நானும் நிறைய தங்கைகள் இருக்கிறவனாக பார்த்துத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று எண்ணம் கொண்டு திரிந்த காலம் அது – ஐந்தாவதோ நாலாவதோ படித்துக் கொண்டிருந்தேன் அப்போது. இன்னொன்று – ஒரு பெண் ஊரின் நடுவில் இருக்கும் சாராயக்கடையை எடுக்க மகளிர் மன்ற பெண்களுடன் சென்று போராடி வெல்வாள். அன்பான வீட்டுக்காரர் இருப்பார், ஒரு நிருபர் உதவி செய்வார், கரெக்டாக அன்றைக்கு கலெக்டர் அந்த பக்கம் வருவார் – அப்படி எல்லாம் போகும் கதை. அன்றைக்கு அவள் வெள்ளை காட்டன் புடவையில் நீல பொட்டுகள் போட்ட புடவை கட்டி சென்றிருந்தாள் என்பது வரை நினைவு இருக்கின்றது என்றால், எத்தனை தரம் அதை படித்து பரவசப்பட்டு இருப்பேன் என்று நீங்களே யூகித்து கொள்ளலாம்.
வார இதழ்களுக்கு அடுத்தபடியாக பரமார்த்தகுரு கதைகள், தெனாலிராமன், பீர்பால், மரியாதைராமன், ஆயிரத்தொரு இரவுகள், விக்கிரமாதித்யன் பதுமைகள், இப்படியாக பல புத்தகங்கள் படித்து இருப்பேன். படிப்பது பிடிக்கும் என்பதால், படித்ததெல்லாமே பிடித்தது. ஐந்தாவது வரை படித்தது தமிழ் மீடியம் பள்ளி என்பதால் ஆங்கில அறிவு மிகக்குறைவு. இந்த டின்டின், டிங்கிள், famous five, nancy drew, enid blyton, ஆர்ச்சீஸ் எல்லாம் படித்ததே இல்லை. ரொம்பவே விவரம் தெரிந்த பிறகு சரி இதை எல்லாம் படிக்காமல் இருந்தால் மிகவும் அவமானம் என்று படிக்க முயற்சி செய்தேன், ஆனால் மனதில் பதியும் அளவிற்க்கு எதுவும் தேறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சாமான் கட்டி வரும் பொட்டல கவர் வரைக்கும் படிக்கும் பைத்தியம் முத்தியது. அப்படியே கொஞ்சம் தேவிபாலா, கண்மணியில வரும் நாவல்கள் என கையில் கிடைக்கும் புத்தங்கள் – இதை எல்லாம் எங்கப்பா வாங்கி தரவில்லை என்று சொல்லவும் வேண்டுமோ…
சரி இது வரை படித்து வந்தவர்களுக்கு, இதை எல்லாம் படிப்பதற்க்கும் கெட்டு குட்டிசுவராவதற்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவரகளுக்கு - இனிமேல தான் கதையே ஆரம்பிக்குதுங்க…
என்னுடைய விதி வாழ்க்கையில் எப்படி விளையாடியது என்றால் – ஒன்பதாவது முடிந்து பத்தாவது போகும் விடுமுறையில் எங்கள் கணித டியுஷன் மிஸ் வீட்டில் ஒரு புத்தகத்தின் வடிவில் உக்காந்து இருந்தது. மத்தியான வேளை பொழுது போகாமல் அவங்க வீட்டிற்க்கு சென்ற நான், சும்மா இல்லாமல், எங்க மிஸ் வீட்டுக்காரர் அவர் ஆபிஸ் லைப்ரரில இருந்து கொண்டுவந்திருந்த – ரமணி சந்திரன் நாவல் – “மயங்குகிறாள் ஒரு மாது” என்ற ஒரு புத்தகத்தை எடுத்து, ஒரு பாய் தலையனை சகிதமாக படுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். கதையை எழுதினால் அடிக்க வருவீர்கள் தான் இருந்தாலும் சிறு சுருக்கமாக – கதாநாயகி கதாநாயகனை சீண்டும் விதமாக நடந்து கொள்வாள், அதனால் கோபமடைந்த கதாநாயகன் அவளை கடத்தி சென்று விடுவான், வீட்டினர் அனைவரும் அவள் யாருடனோ ஓடிவிட்டதாக நினைத்து கொள்வர், கொஞ்ச நாள் கழித்து அவள் கர்ப்பவதியாக திரும்பி வரும்போது யாரும் ஏற்றுக்கொள்ளாததால் தற்கொலைக்கு முயன்று தோற்று, திரும்ப குழந்தையை ஒப்படைக்க வந்து திரும்பவும் சிறைபடும் போது, கதாநாயகனுக்கு அவள் மீது அன்பு ஏற்ப்பட்டு, பின்னர் அவளுக்கும் ஏற்ப்பட்டு, அவள் வீட்டு மனிதர்கள் வந்து ஒப்புக்கொண்டு திருமணம் நடப்பதாக முடியும். இப்போது எழுதும் போது உங்களுக்கு என்ன தான் காதில பூ என்று தோன்றினாலும், அப்போது நான் எப்படி படித்தேன் என்று நன்றாக நினைவு இருக்கின்றது. கண்களி நீர் வழிய வழிய தலையனை முழுவதையும் ஈரமாக்கி, கண்களை கண்ணீர் மறைக்க எனக்கே நடந்தது போல நினைத்து அவ்வளவு சோகமாக படித்தேன். விவரம் அறியாத அந்த வயதில் படித்தது ஒரு வாரத்துக்கு அந்த தாக்கம் இருந்தது.
நான் மட்டும் கெடுவேனா, என்னுடைய டியுஷன் தோழி யாமினிக்கும் சொல்லி, அவளும் படித்தாள். அப்படியே என்னுடைய ஃபீலிங்க்ஸை திருப்பி படித்துக் கொள்ளுங்கள், அதுதான் அவள் நிலமையும் கூட. அப்போதுதான் தெரிந்தது ரமணி சந்திரன் என்று ஒரு எழுத்தாளர் இருக்கின்றார் என்று… முதல் கதை ரொம்ப பிடித்து இருந்ததனால் சரி அவரது மற்ற புத்தகங்களை படித்து பார்க்கலாம் என்று அவள் அம்மா மெம்ப்ராக இருந்த லைப்ரரிக்கு சென்று புத்தங்கள் எடுக்க ஆரம்பித்தோம்… எப்படி ஆரம்பித்தோம் என்று தான் நினைவு இருக்கின்றது, அடுத்து அடுத்து படித்த புத்தங்கள் எல்லாமே கூட நன்றாக இருந்தாக நினைவு. ஒளித்து மறைத்து படித்துக் கொண்டு இருக்கும் போது தான் தெரிந்தது யாமினியின் அம்மாவும் ரமணி சந்திரன் புத்தகங்கள் விசிறி என. ஒளித்து மறைத்து படிக்கும் தொல்லை விட்டது என்றால், நாங்கள் கொண்டு வரும் புத்தகங்களுக்கு அவர்களும், போட்டி போட்டது அன்ட்டி-கிளைமேக்ஸ். வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆனால், புத்தகம் எடுப்பதும், மூவருமாக படிப்பதும் பழக்கமானது. வெண்மையின் நிறம் எத்தனை என்ற ஒரு புத்தகத்தை படிக்கும் போது, நான் அழுததை அவர்கள் பார்த்து என்னை ஓட்டியது மறக்கவே முடியாது. இப்படியாக நாள் நல்ல நாள், வைரமலர், எனக்காவே நீ, விடியலை தேடும் பூபாளம், என் கண்ணில் பாவையடி, காதலெனும் சோலையிலே என பல புத்தகங்கள் படித்தோம்.
நடுவில் எனக்கு படித்ததையே திரும்ப படிக்கும் படிக்கும் பழக்கம் வேறு… நான் படித்து முடித்தும் அவர்கள் இருவரும் படித்து முடிக்க வில்லை என்றால், படித்த புத்தகத்தையே திரும்ப படிக்க ஆரம்பித்து விடுவேன். என்ன ஜென்மமோ என்று நீங்கள் காறி துப்புவது தெரிந்தாலும் அதை எல்லாம் மதிக்க மாட்டோம் பாருங்கள். சில புத்தகங்கள் மிகவும் சொறியாக இருக்கும், அவர்களுடைய புததகத்துடைய அப்பட்டமான காப்பியாக இருக்கும், கேவலமான கதையாக இருக்கும், அப்படிபட்ட புத்தத்ததை படித்தவுடன் நானும் யாமினியும் முடிவு செய்வோம், இத்தோடு இவ புக் படிக்கவே கூடாது யாமினி, படிக்கறவங்களுக்கு சுத்தமா மூளையே இல்லை என நினைக்கறாங்களா என்று சண்டை போடுவோம், ஆனால் அத்தனையும் சீனியை கண்ட எறும்பு போலதான்.. லைப்ப்ரரி காரர் புது புக் வந்து இருக்கும்மா என்றவுடன் விட்ட டையலாக் ஒன்று கூட ஞாபகத்துக்கு வராமல் போய், எடுத்துக் கொண்டு வருவோம் வீட்டிற்க்கு. அதை பார்த்தவுடன் யாமினி அம்மா ஒரு அற்ப புழுவினை பார்ப்பது போல பார்ப்பார்கள், அதையும் மதிக்காமல் படிக்க உட்கார்ந்து விடுவோம். பின்னர் அதே புத்தகத்தை அவர்களும் படிப்பார்கள் அப்போது அந்த பார்வை நாங்கள் பார்ப்போம்… சரி புத்தகம் தானே அதை படிப்பதில் என்ன தப்பு என்று நினைப்பவருக்கு – நாங்கள் எப்படி படிப்போம் என்றால், அதை படித்து முடிக்கும் வரை சோறு தண்ணி தேவை இல்லை. இரவு பகல் பார்ப்பதில்லை. விடியற்க்காலை நான்கு மணி வரை நிறுத்தாமல் படித்து இருக்கிறேன். லைப்பிரரியில் இருந்து திரும்பி வரும் போது நான் வண்டி ஓட்டினால் அவள் பின்னால் உட்கார்ந்து படித்துக் கொண்டு வருவாள், அவள் ஓட்டினால் நான். புத்தகத்தின் பேரை சொன்னால் கதையை சொல்லுவோம் இருவருமே. சத்தியமாக அவள் புத்தகங்கள் படிக்கும் வரை கொஞ்சம் அசட்டு தைரியம், வாய் பேச்சு எல்லாம் கம்மியாக இருந்தது என்று நினைக்கிறேன். வீட்டில் ஒரு வேலை செய்து நினைவில்லை. ஆனால் நாங்கள் படித்த எந்த புத்தகத்தின் கதாநாயகியும், எங்களைபோல புத்தகம் படித்து பொழுது போக்கிய சோம்பேறிகள் இல்லை என்ற உண்மை ஏனோ உறைக்கவே இல்லை. நிஜமாக அந்த கதையில் வரும் வில்லிகளை போலவே நாங்கள் இருந்தோம், ஆனால் கற்பனை என்னவோ மிகவும் உத்தமமான பெண்கள் என நினைப்பு…
இப்படியாக ரமணி சந்திரன் புத்தங்களோடு எங்கள் வாழ்க்கை ஓடியது… நமக்கும் இந்த கதாநாயகிகள் போல ஒரு சுவாரிஸ்யமான வாழ்க்கை அமையும்… ஒரு நல்ல ஸ்மார்ட்டான முக்கியமாக பணக்காரன் எம்.டி யாக வேலை செய்யும் கம்பனிக்கு அவரது செக்கரட்டிரியாக போவோம்… அல்லது யாராவது ஒருவனுடன் சண்டை என ஆரம்பித்து பின்னர் காதலாக மாறும் அல்லது எவனாவது ஒருவனை பார்த்தவுடனே மனசுக்குள் பட்டாம்பூச்சி பறந்து நமக்காக பிறந்தவன் இவனே என்று வெள்ளை உடை தேவதைகள் சொல்ல அவனை கரம் பிடிப்போம், இல்லை கல்யாணம் பண்ணிக் கொள்ளும் போது பிடிக்காமல் செய்து கொண்டு பின்னர் அவனே சிறந்த ஆண்மகன் என்று தெளிந்து அவனுக்காகவே வாழுவோம் அப்படியும் இல்லையா எவனாவது ஒருவன் நம்மைப்பார்த்து நம்மை த்தான் திருமணம் செய்து கொள்ளுவேன் என்று ஒற்றைக் காலில் நின்று கல்யாணம் செய்து கொண்டு நம் மேல் உயிராக வாழ்வான் என்றாவது நினைத்து இருந்தோம் பன்னிரண்டாவது படிக்கும் வரைக்கும். பின்னே அவள் கதையில் எழுதாத மாதிரி வாழ்க்கை இருந்தால் அதில் ஏதாவது சுவாரிஸ்சியம் இருக்குமா என்ன? நிஜமான கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும் கனவுகள் எவ்வளவு சுகமாக இருந்தது?
அப்படியே கொஞ்சம் ஆங்கிலம் பக்கம் போனபோது கிடைத்தவை மில்ஸ் அன்ட் பூன்ஸ்… ஓகோ இந்த அம்மா இங்கிருந்துதான் மேட்டர் சுடுகிறார்கள் என்று கண் திறந்தது, கண்தான் திறந்ததே தவிர அறிவு திறக்கவில்லை. இரண்டையும் மிக்ஸ் செய்து படித்துக் கொண்டு இருந்தோம். கடைசியில் நிறைய புத்தகங்கள் படித்து படித்து சரி நாமே எழுத்தாளர் ஆகி விடலாம் என்ற முடிவுக்கு வராத குறை. ஒரு வழியாக அந்த அம்மா அப்போது வரை எழுதி இருந்த ஒரு 80 புக்கும் படித்து முடித்த பிறகு என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு இருந்த போது எண்டமூரி வீரேந்திரநாத் கையில் அகப்பட்டார். ரொம்ப பிடித்து இருந்தது அவர் புத்தகங்கள். அண்ணபூர்ணா என்று ஒரு புக்கில் கதாநாயகி ஊமையாக வருவாள், அவ்வளவு அருமையாக இருக்கும் அந்த கதையும் கதாபாத்திரமும்… அப்போது யோசித்தேன், நம்ம ரமணி சந்திரன் அம்மா கதாநாயகியை ஊமையாக வைத்தால், கதை எங்கே நகரும்? அவரின் முக்கிய ஆயுதமே கதாநாயகியின் வாய் பேச்சு தானே? எல்லா எண்டமூரி புத்தகங்களயும் ஒரு கையாக முடிக்காவிட்டால் பூலோகத்தில் பிறந்து என்ன பயன்? மிகவும் பிடித்தது – பர்ணசாலை, அந்த கிருஷ்ண சந்திரன்ஆதர்ஷ கதாநாயகன் ஆனான். ரமணி சந்திரனின் ஸ்டிரியோ டைப் ஹிரோவை விட ஒரு படி உயர்ந்து தெரிந்தான். மற்றும் கூண்டுக்குள் குருவி, மனைவி குணவதி சத்ரு, தர்மதாதா, உன்னை விட மாட்டேன், நேத்ரா, என பல புத்தகங்கள் பல விதமான கதைகள், படித்தவுடன் அடக்கடவுளே இந்த மாதிரி புத்தகங்களை படிக்காமல் குப்பை ரமணி சந்திரனை படித்துக் கொண்டு இருந்தோமே என்று ஒரு குற்ற உணர்ச்சியில் ஃபீல் பண்ணிக் கொண்டு இருந்தேன்.
அதற்க்குள் யாமினிக்கு திருச்சியில் கல்லூரியில் இடம் கிடைத்து விட, அவளும் இல்லாமல் நான் மட்டும் தனியாக வாசிக்கும் நிலைமை ஏற்ப்பட்டது. அதற்க்கப்புறமாக கல்லூரி வாழ்வின் அட்டகாஸங்களை அனுபவிக்க ஆரம்பித்து விட்டதால், அதற்க்கே நேரம் பத்தாமல் போக புத்தகங்கள் படிப்பது கொஞ்சம் பின்னடித்தது. அப்போதும் லைப்ரரி போகும் பழக்கம் விடவில்லை, ஆனால் மாசத்திற்க்கு ஒரு முறை என ஆனது. எந்த ஒரு எழுத்தாளரையும் மும்மரமாக படிக்காதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும், உள்ளே போன இன்புட்களுக்கு ஒரு குறையும் இல்லை பாருங்கள். மனம் எப்போதும் நம் ஹிரோவை தேடிக்கொண்டு தான் இருந்தது, சுவாரிஸ்யமான சம்பவங்களை எதிர்பார்த்துக் கொண்டு தான் இருந்தது என்று வெளியே சொல்லக்கூடாதோ? அப்படியே கொஞ்சம் சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர் என ஆங்கில புத்தகங்களில் டைம் பாஸ் ஆனது.
அதற்க்கு நாலு வருஷம் ஓடி விட யாமினி சென்னையிலே வேலை தேடிக்கொண்டு வந்து விட, நாங்கள் திரும்ப லைப்ரரி படை எடுப்பதை ஆரம்பித்தோம் திரும்ப… போய் என்ன செய்தோம் என்கிறீர்கள். சரி ரமணி சந்திரன் படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது, ஏன் நாம அதை திரும்ப ரிவைஸ் பண்ண கூடாது என்று (காறி துப்பினால் மாசைடைவது உங்கள் மானிட்டர் தான்) திரும்ப ஆரம்பித்தோம். காலேஜ் பாடத்தை மூணு வருஷத்தில் ஒரு தரம் கூட ரிவைஸ் பண்ணதில்லை என்தெல்லாம் நினைவே வரவில்லை. நாலு வருஷங்களில் அந்த புத்தகத்தின் கதை என்ன மாறிவிட்டு இருக்குமா என்ன? ஆனாலும் படித்த புத்தகத்தையே திரும்ப படிக்க ஆரம்பித்தோம் அவ்வளவு ஜாலியாக.
அதற்க்குள் எங்களுக்கே ஒரு தெளிவு வந்து விட்டு இருந்தது – நம் வாழ்க்கையில் அது மாதிரி எதுவும் நடக்க போவதில்லை, சரி யார் வாழ்க்கையிலாவது நடந்ததே அதையாவது படிப்போம் என்று, நீங்கள் புக் படிக்கவேண்டாம் என்ற தெளிவு என்று நினைத்து இருந்தீர்கள் என்றால் நான் பொறுப்பல்ல. இரண்டாவது முறையாக அப்போது வரை வந்திருந்த 100 புத்தகத்தையும் திரும்ப படித்தோம். அந்த வருடம் வந்த புக் ஃபேரில் சொந்த சம்பாதியத்தில் ஆளுக்கு இரண்டு ரமணி சந்திரன் புத்தகம் வாங்கியதை மிக பெரிய சாதனையாக கருதினோம்.
சரி அதற்க்கப்புறம் வாழ்க்கை அதன் படி போக, யாமினி லண்டன் சென்று விட்டாள், நானும் வேலை மாறி, அதன் பிறகு திருமணமும் ஆனது. ரொம்ப கம்பெளெய்ன் பண்ண முடியாமல் அமைந்தது காதல் கல்யாணம் தான் என்றாலும், ரமணி சந்திரனின் எந்த ஒரு ஸ்டோரி லைனும் வராத, நாங்கள் எதிர்பார்த்தாற் மாதிரி சுவாரிஸ்யம் எதுவும் இல்லாமல் கல்யாணமும் நடந்தது. என் வீட்டுக்காரருக்கு என் புத்தக பைத்தியம் பற்றி கொஞ்சம் தெரிந்து இருந்தாலும், அப்போது அவருக்கு இருந்த மயக்கத்தில் அது எல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை என்பதே நிஜம். இப்போது கேட்டு பாருங்க, நாராசமான வார்த்தைகள் கொட்டும் அருவி போல.
அதற்க்கப்புறமும் திருந்த முடியுமா நம்மால்… மாமியார் மிகவும் நல்லவர்கள் என்பதால் வேலை செய்து களைத்து வரும் மருமகளை ஒன்றும் வேலை வாங்க மாட்டார்கள், சமையலும் பிரமாதமாக செய்வார்கள் எனவே புகுந்த வீடு பிறந்த வீடு என்ற பாகுபாடு இல்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. இடையில் நான் ரமணி சந்திரன் புத்தகங்களே கையில் எடுக்காத காலம் என்று ஒன்று இருந்தால் அது அகில் வயிற்றில் இருந்த போது தான். நல்ல சிந்தனைகளும், ஆக்கப்பூர்வமான எண்ணங்களுமே இருக்க வேண்டும் என்பதால் பல்லை கடித்துக் கொண்டு படிக்காமல் இருந்தேன். ஆனால் அவன் பிறந்த பிறகு லீவ் முடிந்து ஆபீஸ் வந்தேன். போட்ட ஒரு பத்து கிலோ வெயிட்டை ரமணி சந்திரன் மூலமாகத்தான் குறைத்தேன். என்ன எப்படி என்று கேட்கிறீர்களா? காலேஜ் சமயத்தில் கிடைத்தவள் யாமினி என்றால் ஆபீஸில் சுகந்தி.அங்கே கந்தன் லென்டிங் லைப்ரரி என்றால் இங்கே டிலென்டிங் லைப்ரரி. எங்களை மாதிரியே குட்டிசுவர்களுக்கு என, எப்படித்தான் சரியான இடங்களில் மாட்டுமோ?
இருவருமாக எங்கள் ஆபீஸில் உள்ள ஜிம்மிற்க்கு தினமும் ஒரு புத்தகத்துடன் சென்று விடுவோம். கையில் புத்தகம் இருந்தால் ஒரு 40 நிமிடம் டிரட்மில்லில் அலுக்காமல் நடக்கும் நாங்கள் புத்தகம் இல்லை என்றால் ஒரு பத்து நிமிடத்திற்க்கே உன்னைப்பிடி என்னைபிடி என நாக்கு தள்ளுவோம். இப்படியாக ரமணி சந்திரனை மூன்றாவது முறையாக முழுவதும் ஒரு ஆறு மாச காலத்தில் படித்து முடிக்கும் நேரம், ஆளுக்கு பத்து கிலோ குறைந்து, நான் பழைய மாதிரி ஆகி இருந்தேன். எதற்க்கு நன்றி கடன் பட்டு இருக்கிறோமோ இல்லையோ உடல் இளைத்ததற்க்கு நன்றி கடன் பட்டு இருக்கிறோம். யாராவது என்னை பார்த்து, அடிப்பாவி இப்படி இளைத்து இருக்கிறாயே எப்படி என்றால், பெருமிதமான சிரிப்பு ஒன்றை உதிர்த்து மனதிற்க்குள் நடந்த காட்சியினை ஓட்டிப் பார்ப்பேன். வெளியே சொன்னால் மானம் கப்பலேறிப் போகும் என்ற காரணத்தினால் ரகசியம் காத்துக் கொண்டு இருந்தேன்.இந்த சமயத்தில் எங்களுக்கு ஒரு ஞானோயதம் ஏற்ப்பட்டது, படித்த புத்தகங்களை ஒரு பட்டியல் போட்டு வைத்துக் கொண்டால் என்ன, பின்னாளில் ரெஃப்ரென்ஸாக இருக்குமே என்று எங்கள் மூளைக்கு ஒரு அற்புதமான ஐடியா தோன்றியதால், zoho sheet’ல் ஒரு ஷீட் போட்டு, புக் பெயர், கதாநாயகி, கதாநாயகன் பெயர்கள், கதை சுருக்கம், எங்களது கருத்து என பட்டியலிட ஆரம்பித்தோம். அது போனது அனுமார் வால் கணக்காக ஒரு 120 புத்தகங்களுக்கு மேல்.. ரமணி சந்திரனே அந்த மாதிரி ஒரு ரெஃபரென்ஸ் வைத்து இருப்பார்களா என்று தெரியவில்லை…
இதற்க்கு நான் எப்பேர்பட்ட ஓ.பி. பேர்வழி என்று தெரிந்து விட, என் வீட்டுக்காரர் உஷாராகிவிட்டார். என் கையில் புக்கை பார்த்தாலே அவருக்கு பிரஷர் ஏற ஆரம்பித்தது. அதை விட என்ன புக் படிக்கற கதை சொல்லு என்று ஓரே நச்சரிப்பு. யோவ் இந்த கதை எல்லாம் படிச்சு தான்பா பார்க்கனும், சொன்னா எல்லாம் புரியாது என்று நானும் எவ்வளவோ எஸ்கேப் ஆக பார்த்தாலும் வீடாக்கொண்டனாக அவர் துரத்த, வீட்டில் புத்தகம் படிக்கும் சுதந்திரம் கொஞ்சம் பறி போனது. பாத்ரூமில் பதுக்கி வைப்பது, துணிமணிகளுக்கு இடையே சொருகி வைப்பது, ஆள் வீட்டில் இருக்கும் போது பாத்ரூமில் உட்கார்ந்து படிப்பது என பொழப்பு நாறிப்போனது… சரி இதற்க்கு மேலே போனால் மரியாதை இருக்காது என்ற எண்ணத்தாலும், மூன்றாவது முறையும் 120 புத்தகங்கள் படித்து முடித்து விட்டதாலும், ரமணி சந்திரனை ஏறக்கட்டி வைத்தேன்.
இத்துடன் முடிந்ததா? இல்லையே, லண்டனுக்கு போனாளே யாமினி என்று ஒரு எமகாதகி. லைப்ரரி புத்தகங்கள் அங்கே கிடைப்பதில்லை என்பதால் ஆன்லைனில் ஒரு குரூப் கண்டுபிடித்தாள். அங்கு எல்லா ரமணிசந்திரனையும் ஒரு மகா புண்ணியவதி ஸ்கேன் செய்து, அப்லோட் செய்து வைத்து இருந்தாள், தான் மட்டும் கெடுவாளா என் தோழி, யான் பெற்ற இன்பம் பெருக என் தோழியும் என்ற எண்ணத்தில் எனக்கு அனுப்பி வைத்தாள். அதை பார்த்த நான் சும்மா இருப்பேனா, புக்காக படிக்கும் போது கண்டு பிடித்த கணவரால் கம்ப்யூட்டரில் ஆல்ட் டேப் போட்டு படிக்கும் போது கண்டு பிடிக்க ரொம்ப நேரம் ஆனதால் அதிலே ஒரு 50 புக் டவுன்லோட் செய்து வீட்டு கம்ப்யூட்டரில் வைத்து, வீட்டில் ஆள் இல்லாத போது, அல்லது போர் அடிக்கும் போது படித்துக் கொண்டு இருந்தேன். மனப்பாடமான புத்தகங்களை தவிர மற்றவையை படித்து டைம் பாஸ் செய்து கொண்டு இருந்தேன்….
நடுவில் காஞ்சனா ஜெயதிலகர் நாவல்களும் படித்தேன். பரவாயில்லை நன்றாகவே எழுதினாலும், நூறு பக்கத்திற்க்கு அதிகமாக இருப்பதில்லை என்பதால் சுவாரிஸ்யம் குறைவாக இருப்பதாக தோன்றியது. கதை ஆரம்பிப்பதற்க்குள் முடிந்து விடுகின்றது… கண்டிப்பாக ரமணி சந்திரன் நடையில் எழுதவில்லை என்றாலும், முக்கால் மணி நேரம் கூட தாக்குபிடிக்க மாட்டேங்குது. அடுத்ததாக ஜெயசக்தி – இவரது புத்தங்கள் பெரிதாக இருந்தாலும், சில சமயம் பயங்கர ஜவ்வாக இழுக்கின்றார். அப்புறம் கதை வேற இருக்குது… கொஞ்சம் கவணித்து படிக்க வேண்டியதாக் இருக்கின்றது. ரமணி சந்திரன் ஹிரோவும் ஹீரோயினும் சேர்ந்தவுடன் அழகாக கதையை முடித்து விடுவார், இந்த அம்மா அதற்க்கபுறம் ஒரு 20 பக்கம் எழுதுகிறார், அடக்கடவுளே… எப்போது முற்றும் வரும் என எதிர்பார்க்க தோன்றுகிறது. ஆகையால் இவர்கள் புத்தக்ங்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகை என சொல்ல முடியவில்லை.
ஆனால் இப்போதும் ரமணி சந்திரன் நாவல்களை கண்டால் கை பர பர என்று தான் இருக்கின்றது. ஒரு முப்பது- நாற்பது படு கேவலமாக இருக்கும், அதை சத்தியமாக படிக்க முடியாது, மற்றவை தேவலை, நல்ல புத்தகமாக ஒரு 40 தேறும், ஒரு மாததிற்க்கு ஒரு முறையாவது படிக்கலாம்
ஒரு சமயம், எனது கணவர் அலுவலத்தில் வேலை செய்யும் ஒருவர் ரமணி சந்திரனின் விசிறி என கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், அதுவரை பெண்கள் மட்டுமே படிப்பார்கள் என்ற என் எண்ணம் ஆட்டம் கண்டது அப்போது. இதில் வேறு அவர் அவரிடம் இருந்த புத்தகங்களை எனக்கு வேறு படிப்பதற்கு தந்தனுப்பினார், அடப்பாவி மனுஷா நாங்க படிக்காத புத்தகமே இல்லையே, என்று சொல்ல முடியாமல் வாங்கி திரும்ப படித்துவிட்டு கொடுத்தேன்
பின்னே படிக்காமல் கொடுப்பதற்க்கா அவர் கஷ்டப்பட்டு கொடுத்தார்?
அவரது புத்தங்களை கடுமையாக விமர்சிப்பவர் பலரும் உள்ளனர், என் அலுவலத்திலேயே பணிபுரியும் நந்தா, பக்காவாக ஒரு பதிவினை போட்டிருந்தார். அவருக்கு பதில் எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்து தள்ளிப் போய்விட்டது, இப்பொது ஒரு பதிவாகவே வெளி வந்து விட்டது. அவர் கதைகளை நல்லது, அல்லது அறிவுக் கண்களை திறப்பது என்று எல்லாம் என்னாலேயே சொல்ல முடியாது. அது வெறும் ஒரு பொழுது போக்கு மட்டுமே, ஆண்கள் கும்பலாக சேர்ந்து கூத்தடிப்பது, அல்லது சிகரெட் பிடிப்பது போன்றது எப்படியோ அப்படித்தான் இந்த புத்தகங்களும் என நான் நினைக்கிறேன். இந்த கதைகளில் மாமியார் மருமகள் சண்டைகள் வருவதில்லை, வருமானத்தினை எண்ணி எண்ணி செலவு பண்ணும் வறுமை வருவதில்லை, நம்மை சுற்றிலும் நெருக்கும் சமுதாய பிரச்சனைகள் வருவதில்லை, வருவதெல்லாம் ஒரு அழகான கதாநாயகி, ஒரு பணக்கார கதாநாயகன், அவர்களின் கருத்து வேற்றுமைகள்/ஒற்றுமைகள், அவர்களை சுற்றி நிகழும் சில பல நிகழ்ச்சிகள்,குழந்தை பெற்ற பின் கல்யாணம் அல்லது கல்யாணம் செய்த பின் குழந்தை (இது எல்லாம் அரசியல்ல சகஜம்மப்பா), அன்பு, காதல், அப்புறம் ஒரு இன்ப வாழ்வு. எத்தனையோ பெண்களுக்கு இவைகளில் பல மறுக்கப் பட்டு இருக்கலாம், அவர்களின் உணர்ச்சிகளின் வடிகாலாக இந்த புத்தகங்களை படிப்பவர்களாக இருக்கலாம். மேலும் ரமணி சந்திரன் படித்ததால் வாழ்க்கை வீணாக போனது என்று புலம்புவர் யாரையும் நான் பார்த்தது இல்லை. படிப்பவர்களுக்கும் நன்றாக தெரியும், இது ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று, அப்படியும் கேளாமல் வீணாக்கி கொள்ளுபவர்க்கு, இது வெறும் கருவியாக மட்டுமே இருக்க கூடுமே தவிர முதல் காரணமாக இருக்க முடியாது என நான் நினைக்கிறேன். என்னுடைய மகன் அல்லது மகளுக்கு இவர் புத்தகங்களை படிக்க விடுவேனா என்றால், கண்டிப்பாக விடுவேன் என்று தான் தோன்றுகிறது, கூடவே ஒரு முறை வாழ்க்கை நிதர்சத்தை எடுத்து சொல்லிவிட்டு என் பெண்ணுடன் ஒரு பத்தாவது தரமாக ரிவைஸ் பண்ணிக் கொண்டு இருப்பேன்….
திருந்தாத ஜென்மம் என்றுதானே திட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள், அதுதான் எங்களுக்கே தெரியுமே, திருந்துவது என்றால் நாங்கள் எப்போதோ திருந்தி இருக்க மாட்டோமா?
ஜெயா.
May 19, 2009 @ 16:28:31
hey jaya,
i have to reply for this..enn udai first rc book is vidiyalai thedi in rani introduced by my mum but i managed to catch up only the last 2 weeks of the edition. but after that i cant remember between enakagave nee, mayangukiral oru maadhu and urangala kangal. kaari thuppadhe. ivalavu memory power padipil irundha soopera irukkum.mmm..actually sila books i have downloaded on my system, mudincha cd copies pottu murali kita anupi vekkiren. lol.inga rc books discuss pannurathukku makkale illa jaya.sari we will do it with each other thru mails.
keep blogging and keep entertaining us.
yaamini
May 19, 2009 @ 19:13:44
/.inga rc books discuss pannurathukku makkale illa jaya.sari we will do it with each other thru mails.//
யப்பா இந்த அநியாயத்தை தட்டிக் கேட்குறதுக்கு இங்க ஆளே இல்லையா?
May 20, 2009 @ 08:17:16
கண்டிப்பா யாமினி, முரளி கிட்டே கொடுத்து அனுப்பு, அவன் கிட்ட திட்டு வாங்கிட்டு அந்த சி.டியை வாங்கிக்கிறேன்
மித்த டிஸ்கஷன் இங்கே வைச்சுகிட்டோம் வையேன், நந்தா மாதிரி ஆளுங்க வயித்தெரிச்சல்ல wordpress e down ஆகிடும்…
btw, did u get uyiraai irukka varuvaayaa?
நந்தா: ஆனாலப்பட்ட எங்க வீட்டுக்காரகளே இதுங்க திருந்தாத கேசுங்க என்று தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க, வேற யார் எங்களை என்ன செய்து விட முடியும்?? போங்க போங்க போய் டீ ஆத்துங்க
ஜெயா.
May 20, 2009 @ 08:20:41
Jaya…RC and other tamil books came a bit late in my life..by then I was old enough to understand the difference between real world and fantasy. But then I have to say that there was time when I was sure my career path would be setting up a detective agency in Royapettah…if not River Heights..Thanks to one Nancy Drew a day diet that my group indulged in. Eshwari lending library people in gopalapuram (near my school)were really suspicious of our motives..we used to take one book in the morning and return it within hours of reading it. They asked us, if were xeroxing the books and returning it back!!Engha Appa sotthule..paadhi Eshwari lending library-ke yezhudhi koduthutom
May 21, 2009 @ 06:38:05
i have just finished reading one para… ippovey kanna kattudhey
jaya indha post konjam over build up dhaan…
more comments on the pipe
May 21, 2009 @ 06:43:02
thalaippukke kannai katti irukkanume unakku??
May 21, 2009 @ 06:48:03
“லாரா கெமெரூனும், டிரேஸி விட்னியும் தினமும் கனவில் வரும் கதாநாயகிகள் ஆகினர். ”
செம்ம பீலா … maximum அம்பிகா இல்ல ராதா வந்திருப்பாங்க….
unlimited பீலா
“அந்த தியாக சுடர் கதையை படித்து விட்டு, நானும் நிறைய தங்கைகள் இருக்கிறவனாக பார்த்துத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று எண்ணம் கொண்டு திரிந்த காலம் அது – ஐந்தாவதோ நாலாவதோ படித்துக் கொண்டிருந்தேன் அப்போது.”
utter கப்சா
May 21, 2009 @ 11:45:54
டிரேஸி விட்னி வந்து பயங்கர சூப்பரா திருடுவா, அதுக்கும் மேல ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பா போய்கிட்டு இருக்கும். சரியான சஸ்பென்ஸ் ல நிறுத்துவார். அது எல்லாம் அனுபவிச்சு படிச்சு இருக்கனும்… அது ரெண்டுமே female dominant stories நம்ம ஊர் அம்பிகாவும் ராதாவும் என்ன ஸ்டண்ட் செய்வாங்க, மரத்தை சுற்றி பாட்டு பாடறதை தவிர…
இப்போ அப்படி சொன்னாதான்டா கப்ஸா… அப்போ கண்டிப்பா அது தான் பெரிய விஷயமா இருந்தது. நிஜமா அப்படி ஒரு மெழுகுவத்தியாகி வாழ்க்கையை தியாகம் பண்ணனும் என்று எல்லாம் அந்த வயசில தான் தோணும், இப்போ சொன்னாய் என்றால், போடா என்று தான் சொல்லுவேன்.
பீலாவும் இல்லை கப்ஸாவும் இல்லை.
ஜெயா.
May 21, 2009 @ 15:07:22
“இப்போ அப்படி சொன்னாதான்டா கப்ஸா… அப்போ கண்டிப்பா அது தான் பெரிய விஷயமா இருந்தது. நிஜமா அப்படி ஒரு மெழுகுவத்தியாகி வாழ்க்கையை தியாகம் பண்ணனும் என்று எல்லாம் அந்த வயசில தான் தோணும், இப்போ சொன்னாய் என்றால், போடா என்று தான் சொல்லுவேன்.”
அது தான் உங்களுக்கு ஒருத்தர் சிக்கிடாரே
பாவம் அவர் இந்த மாதிரி ஏதும் கதை படிச்சது இல்ல போல
அவர் தான் தியாகி … நான் அவர பத்தி குடும்ப மலர்ல எழுதுறேன்
அகில் பிர்காலத்துல ப்லாக் போடுவான்
உங்கமாதிரியே
May 28, 2009 @ 06:58:31
தியாகி,
உங்க அனுதாபத்திற்க்கு ரொம்ப நன்றி, வெங்கட் கிட்ட கண்டிப்பா சொல்லறேன், குடும்ப மலர்ல எழுதும் போது அவர் போட்டோவும் வேண்டும் என்றால் சொல்லுங்க, அனுப்பி வைக்கறேன்
.. (பாவம் அவர் பப்லிஸிட்டியை நாம ஏன் கெடுப்பானேன்…)
ஜெயா.
May 28, 2009 @ 04:07:26
புக் படிகிரதுல நீங்க என்னைய மிஞ்சிருவிங்க போல தெரியுதே …. இப்போல்லாம் இணையத மேயுரதொட சரி … புத்தகம் படிக்கா நேரம் இல்லை பா …
)))
Jun 12, 2009 @ 13:48:32
அய்யோ, படிச்ச எனக்கெ இப்டி மூச்சு வாங்குதே, எழுதினவங்க உங்க கதியை நினைச்சா பயமால்ல இருக்கு!!!
ஆண்கள் இது மாதிரி நாவல்களோ, மில்ஸ் அண்ட் பூனோ, கண்மணி ல வர்ற நாவல்களோ படிக்க மாட்டாங்கன்னு நினைச்சா அது உங்க தப்பு!!!
இந்த ரமணி சந்திரன், காஞ்சனா வரிசைல நடுவுல இன்னொரு எழுத்தாளரை உட்டுடீங்க.. அவங்க பேரு உமா பாலகுமார். அதுவும் அவங்க கதைல நடுவுல கவிதை எழுதுவாங்க பாருங்க அதுதான் அல்டிமேட்டே….
அப்புறம் ரமணி சந்திரன் நாவல்கள்….ம்க்கும் ஏற்கனவே அந்த நாவல்களுக்கு ரெண்டு பதிவு வந்துருச்சு, இப்ப நானும் எழுத ஆரம்பிச்சா இன்னொரு பதிவு வந்துரும், அதனால என் ஆட்டையை இதோட முடிச்சுக்கறேன்…
Jun 12, 2009 @ 14:57:49
//ஆண்கள் இது மாதிரி நாவல்களோ, மில்ஸ் அண்ட் பூனோ, கண்மணி ல வர்ற நாவல்களோ படிக்க மாட்டாங்கன்னு நினைச்சா அது உங்க தப்பு!!!//
நிஜமாங்க… நான் அவர்கிட்ட ரொம்ப ஆச்சரியமா கேட்டேன், நீங்க ரமணி சந்திரன் படிப்பீங்களா என்று, அதுக்கு அவர் ரொம்ப அஸால்டா பதில் சொன்னார், “ஏங்க அதில்ல ஹிரோயின் என்று ஒருத்தி வரும் போது, ஹிரோவும் தானே வரான், நாங்க படிக்ககூடாதா என்று…” அசிங்கமா போச்சு, படிக்கலாங்க என்று மழுப்பி வைத்தேன்..
நரேஷ், இவங்க மூன்று பேர் நாவலை படிச்சே இப்படி திரிஞ்கிட்டு இருக்கேன், இதுல உமா பாலகுமார் வேறவா? இது வரைக்கும் படித்ததில்லை, இனி மேல் முடிஞ்து என்றால் புரட்டி பார்க்கிறேன்.
ஜெயா.
Jun 15, 2009 @ 06:19:41
//நான் அவர்கிட்ட ரொம்ப ஆச்சரியமா கேட்டேன், நீங்க ரமணி சந்திரன் படிப்பீங்களா என்று, அதுக்கு அவர் ரொம்ப அஸால்டா பதில் சொன்னார்//
பொதுவா, படிக்கும் காலத்தில் கதை புத்தகம் படிக்கறதை ஊக்குவிக்காத நிலைதான் இருந்தது பெரும்பாலான குடும்பங்களில் (சில இடங்களைத் தவிர..)
இந்தச் சூழலில் கதை புத்தகம் படிக்க வேண்டுமானால், அந்தக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் படித்தால் மட்டுமே படிக்க இயலும்…
புத்தகம் படிப்பதற்கு ஆரம்ப நிலையில் இருப்பது சிறுவர் மலரே.. பின் படிப்படியாக அம்புலிமாமா, காமிக்ஸ், கோகுலம் ஆகியவற்றிற்கு அடுத்த நிலையில் க்ரைம் நாவல்கள் வந்தது நிற்கின்றன…
ஏறக்குறை பத்தாவதுக்கு அடுத்து, அலல்து 12வது படிக்கும் காலங்களில் ராஜேஷ் குமார் முதல் பிகேபி வரை எல்லாருடைய நாவல்களையும் படித்து, அட்டை பிய்ந்து இருந்தால் கூட யாருடைய நாவல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்துவிடும்.
இந்தக் காலங்களில் கண்டிப்பாக காதல் சம்பந்தமாக வரும் நாவல்களை படிக்கும் ஆசை வரும். இந்த ரமணி சந்திரன், கண்மணியில் வரும் நாவல்கள் ஒரு வித ஃபாண்டஸி டைப் கொண்டவை. துரதிர்ஷட வசமாக தமிழில் எனக்குத் தெரிந்து காதல் பற்றிய நாவல்கள் இஃத மாதிரி ஃபாண்டஸி டைப்பில் இருக்கின்றன (லை ரீடிங்கில்) அல்லது உண்மைக்காதலை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன என்றே நினைக்கின்றேன்…
அக்காக்கள் உள்ள வீடுகளில் இந்த கண்மணி, ரமணிசந்திரன் எளிதில் கிடைக்கும் அல்லது சொந்தக் காரங்களிடம் எளிதில் கிடைக்கக் கூடியது இவையே…
இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் ஆண்களும் படிக்கதற்கு காரணமாய்.. தவிர ஏதாவதொரு கடுப்பின் போது லைட் ரீடிங் படிக்க வேண்டுமெனில்,இது போன்றதொரு ஃபாண்டசி டைப்புதான் கொஞ்சம் நன்றாக இருக்கின்றன…
இப்பல்லாம் க்ரைம் நாவல் எடுத்தால் அரை மணிநேரம் கூட ஆவதில்லை.. ஒன்று எழுத்தாளர் என்ன சொல்லப் போகிறார் என்பது தெரிந்து விடுகிறது அல்லது முன்பளவு பிடிப்பதில்லை..
இந்த வயசுல காதலைப் பத்தி படிக்க ஆண்கலும் எங்கதான் போவாங்க பாவம்??? ஆனா, அந்த நாவல்ல வர்றதுதான் காதலான்னு கேட்டீங்கன்னா அது தனி பதிவாவே போவும் (அதை விட்டிரலாம்)!!!!!
Jun 16, 2009 @ 10:50:55
dear jaya,
ungala madhiriye nanum en friend maria vum ramani mam fans. we were just friends in the beginning, but we became close friends, when she told rc story to me we were studying +2 [:-P]
Jun 16, 2009 @ 10:51:36
[(:-))]
Jun 18, 2009 @ 10:26:29
நரேஷ்,
எங்க வீட்டுக்காரரக்கும் இந்த மாதிரி கதை புத்தகங்களுகும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம். மித்தபடி வாய்ச்ச நண்பர்களும் இந்த மாதிரி கதை புத்தகங்கள் படிக்கற கோஷ்டி இல்லை… இந்த பட்டுக் கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களை படித்ததை பார்த்துத்தான் பழக்கம். ஆகவேதான் முதல் முறை கேட்டும் போது ஆச்சர்யமாக இருந்தது. இப்போ இந்த மாதிரி ஒரு கோக்ஷ்டியும் இருக்கு என்று தெரிய வருது.
ஹாய் நிரு, “ரமணி மேம்” என்று எல்லாம் சொல்லறீங்க
welcome to the gang
ஜெயா.
May 10, 2012 @ 18:19:23
Neenga N.Seethalakshmi novels padichurukkengala?
Jun 29, 2009 @ 10:13:43
நரேஷ், நந்தா உபயத்தால கொஞ்சம் உமா பாலகுமாரின் புத்தகங்கள் படித்தேன். அப்பப்பா.. எழுத வார்த்தைகளே இல்லை… ரமணி சந்திரனாவது ஒரு 5,6 டெம்பிளேட் வைச்சு இருக்காங்க, இந்த அம்மா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு தான்.
அய்யோ முடியலை என்னால, ஒரே பணக்கார ஹீரோ, தங்கமா மினுமினுக்க்ற ஹீரோயின், முதல்ல கன்னாபின்னா என்று திட்டற ஹீரோ அந்தர் பல்டி அடிச்சு, நீதான் என்னோட உயிர் என்று சொல்லற வரைக்கும் ஒரே மேட்டர். என்ன ஹீரோயின் பேர் வித்தியாசமா வைக்கனும், அப்புறம் லொகேஷனை கொஞ்சம் மாத்திக்கனும், அப்ப பேப்பர்ல வந்து இருக்கற மோசமான பெண்களை எப்படியாவது ஹீரோக்கு சொந்தகாரங்களாக்கி ஹீரோவோட ஃபீலிங்கை நியாயப்படுத்தி, ஹீரோயினை ஒரு மனிதாபிமான சின்னமாக்கி முடித்து விட வேண்டும்.
ஏதோ ஒரு புக்கில, ஹிரோயின் வந்து ஹிரோவை விரும்பறதை ஹிரோகிட்ட சொல்லறத்துக்கு முன்னாடி, வீட்டுக்கு வந்தவங்க கிட்ட அவங்க அப்பா அம்மா முன்னிலையில சொல்லுவாளாம்… அதை கேட்டு அவங்க அம்மா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்களாம், பொண்ணு மனசு உடைஞ்சு அழுவறதை பார்த்து, முதுகை வருடிக் கொடுப்பாங்களாம்… அடியேய், யாருக்கம்மா இப்படி எல்லாம் அம்மா அமைவாங்க.. எங்க வீட்டில எல்லாம், செருப்பையும் விளக்குமாரையும் தானே வைச்சு சாத்துவாங்க… எல்லா ஹீரோயினும் எப்படித்தான் எல்லா நாய்குட்டி மேலேயும் பாசம் காட்டறாங்களோ? அதுலயும் இந்த அனாதை ஆசிரமத்துக்கு வேலை செய்யறது, ரத்த தானம் செய்யறது, கண் தெரியாதவங்களுக்கு பரிட்சை எழுதறது என்று நல்ல காரியங்களா செய்து கொண்டு இருப்பாங்களோ தெரியலை….
நடுநடுவில நீங்க சொன்ன மாதிரி கவிதை தொல்லை வேற… லைன் கணக்கு எல்லாம் இல்லை, பக்கம் கணக்குத்தான். பார்க்கும் போது என்ன ஞாபகம் வந்தது என்றால் இந்த பரிட்சைகளில் பக்கம் கணக்கு காண்பிப்பதற்க்காக தள்ளி எழுதுவோமே, அந்த ஐடியாதான் இவங்க நடைமுறை படுத்தறாங்க என்று..
ஒருவேளை இந்த மாதிரி புத்தகங்களில்ல மூழ்கி முத்தெடுத்ததால இவ்வளவு சுமாராக தோணுதா, இல்லை நிஜமாவே சுமாரா தான் எழுதறாங்களா என்று தெரியலை…
ஜெயா.
Jul 01, 2009 @ 21:19:44
நீங்க சொன்ன எல்லாம் புரிஞ்சது, ஆனா ஒண்ணே ஒண்ணைத் தவிர….
கடைசில முத்தெடுத்தேன்னு சொன்னீங்களே அது இந்த ரமணிச் சந்திரன் புத்தகங்களா???
ஆஃபிஸ்ல இருந்து வந்து மனுஷன் செம கடுப்புல இருக்குறப்ப கொஞ்சம் லைட் ரீடிங்கா படிக்கனும்னு நினைக்கறப்ப இந்த மாதிரி புத்தகங்கள்தான் மாட்டுது….
புத்தகத்தை படிக்கும் போதே நம்மையறியாமல் சிரிக்க வைக்கிற கலையை எங்கிருந்துதான் கத்துகிட்டாங்களோ தெரியலை, அப்படி ஒரு காமெடி பண்ணிடுறாங்க…
இந்த புத்தகத்துல் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னான்னா, ஹீரோயின் கடைசி வரை திட்டு வாங்கிட்டேதான் இருப்பா, இருந்தாலும் அந்த கருமம் புடிச்ச காதல் வந்துருமாம்???
இவங்க காதலையே கிண்டல் பண்றாங்காங்க.. அவனவன் இங்க உசிரைக் கொடுத்து, பாசமா, அன்பா பேசுனா ஏதோ ஜந்துவைப் பாக்கறமாதிரி போறாங்க பொன்ணுங்க…இதுல கண்டபடி திட்டுனா காதல் வருமாம்….
அது என்ன கருமமோ தெரியலை, எல்லா கதையிலியும் இந்த ஹீரோ பெரிய பணக்காரராவே ருக்கறார்….ரிசஷன் டைம்ல கடுப்பேத்துறாங்கப்பா….
Jul 02, 2009 @ 13:35:18
சே சே.. ரமணி சந்திரன் மட்டும் இல்லை, எக்கச்சக்க M&B, நம்ம ஜெயசக்தி, காஞ்சனா, கொஞ்சம் வரலாற்று ரோமான்ஸ் என கொஞ்சம் பட்டியல் நீளும் தான்…
கண்டிப்பா சிரிக்க கூடிய புத்தகம்தான்… அதுல எந்த ஒரு டவுட்டும் இல்லை.
ஆமா, இந்த புக் படிச்சுட்டு தான் ஃபீலிங் வரலை என்று சீன் போட்டுகிட்டு இருக்கீங்களா என்ன?? இந்நேரத்துக்கு, யாரையாவது பார்த்தா வயித்தில பட்டாம் பூச்சி பறக்கறது, சுற்றுப்புறம் மறந்து மெய் மறந்து நிக்கறது, கண் இமைக்க மறந்து நாம நிக்க, அவங்களே வந்து கொஞ்சம் வழி விடறீங்களா என்று கேட்கறது, இவங்கதான் நமக்காக பொறந்து இருக்கற பாவபட்ட ஜென்மம் என்பது ஒரே பார்வையில தெரியது எல்லாம் பக்கா ரீல் மேட்டர் என்று?
ஜெயா.
Jul 02, 2009 @ 16:02:15
நான் ஃபீல் பண்றதுக்கு எதுக்குங்க இந்த புக்கை படிச்சிட்டு ஃபீல் பண்ணனும், வேணும்னா படிச்சவுடனே ஏண்டா படிச்சோம்னு ஃபீல் பண்ணலாம்…
நான் சொல்ல வந்தது வேறன்னு உங்களுக்கே தெரியும்
))
//யாரையாவது பார்த்தா வயித்தில பட்டாம் பூச்சி பறக்கறது, சுற்றுப்புறம் மறந்து மெய் மறந்து நிக்கறது, கண் இமைக்க மறந்து நாம நிக்க, அவங்களே வந்து கொஞ்சம் வழி விடறீங்களா என்று கேட்கறது, இவங்கதான் நமக்காக பொறந்து இருக்கற பாவபட்ட ஜென்மம் என்பது ஒரே பார்வையில தெரியது எல்லாம் பக்கா ரீல் மேட்டர் என்று? //
யாரடி நீ மோகினி படத்துல வருதே அந்த மாதிரியா????
Jul 04, 2009 @ 11:11:15
அடடா நரேஷ், நீங்க புக் படிச்சு மட்டுமில்லை, படம் பார்த்தும் ரொம்ப கெட்டு போய் இருக்கீங்க போலவே….
அசசச்சோ..
ஜெயா.
Jul 09, 2009 @ 06:32:43
jeya
வெளி நாட்டில் ரமணி சந்திரன் புக் கிடைக்காமல் ரொம்ப கஷ்டமா இருக்கு.
எனக்கும் அனுப்புங்கள்.
Jan 28, 2012 @ 10:36:07
send even to me.. i have a collections of more than 100 books…
Jul 15, 2009 @ 02:25:10
பிரியா, email id அனுப்புங்கள்.. முடிந்தவரை அனுப்ப பார்க்கிறேன்.
ஜெயா.
Jul 15, 2009 @ 09:25:11
Hi Jeya,
Thank you Thank you Thank you So much Jeya
emailid: angelinpriyadarshini@yahoo.com or rcnovel@gmail.com
Jul 15, 2009 @ 14:32:15
Hi Jeya,
Thank you Thank you So much Jeya.
Email id rcnovel@gmail.com or angelinpriyadarshini@yahoo.com
Jul 15, 2009 @ 14:34:48
Hi Jeya.
Thank you So Much .Please send to rcnovel@ gmail.com
Jul 15, 2009 @ 19:31:36
ஏன் இப்புடி, நாடு வுட்டு நாடு ஒருத்தரை கெடுக்கணுமா???
Jul 20, 2009 @ 07:18:04
Thanks Jeya
Jul 20, 2009 @ 11:46:36
கெடறது என்று ஆன பிறகு, வீடு விட்டு வீடு, நாடு விட்டு நாடு என்று எதுக்கு இந்த குறுகிய கண்ணோட்டம் நரேஷ்?
ப்ரியா அடிச்சு இருக்கற தேங்க்ஸ் நான் அனுப்பின புத்தகத்துக்கு என்று தெரிஞ்சா வேற உங்க பிரஷர் ஏறுமோ?
ஜெயா.
Jul 27, 2009 @ 01:15:29
Nice blog. Enjoyed reading this. Keep it up.
Jul 28, 2009 @ 06:21:19
Thanks Jyothi.
Jaya.
Sep 15, 2009 @ 14:38:28
Hi Jaya,
Good Analyzing. Ramani Chandran mattuma Blakumaran padickaliya? Avarucku oru periya gang of fans iruckangale…. I like ur opion abt Kalki’s narration. It’s really amazing. Even this one….But i don’t like RC’s books. But enackum padikara payithiyam dhan. So kidacha padippen.
(Venkat’s friend Premalatha)
Sep 16, 2009 @ 07:50:55
Hi Prema,
Balakumaran ellam padichathu illai. Did not get a chance and was not eager to read them too.
Even we do not like RC books
Jaya.
Sep 30, 2009 @ 11:21:39
Dear Jaya,
Ofcourse its worth nothing to read rc books but even then we are reading at times when we need to time pass. Did u read Sandilyan’s books it may not be like kalki’s but quite interesting except his varnanai about ladies I like his pore viyugangal and the thanthrangal his heros follows in war.
Hope you may like it so try reading. Also Jayaganthan’s novels are good. He is very realistic person. My favourite writer is “Sivasankari” she is not writing much now. But she is my favourite in female writers and kalki is my all time favourite manidhar seekirame irandhu vittar illaiyendral innum yethanaiyo navalgal vandhirukkum. Andhavagaiyil yenakku yemanidam konjam kobamthan mudindhal yemanai paarkkumbodthu alvarkadiyan nambi thadiyai suzhatriyathupol nanum ethavathu seyyakkoodum.
I was bit dull this morning but after reading your blog i refreshed myself by remembering all those books and those days. innamum sappidale.
Thanks for refreshing myself.
Keep it up.
Yendrendrum Anbudan,
Gowri Manohari.
Oct 01, 2009 @ 02:28:50
No gowri, I have not read sandilyans book either, except for a few todar kadhais which came in the weekly magazines. Should read his book, probably in this break I will start reading sandilyan. I have read a couple of jayakanthan too. Romba serious matter konjam velaikkaavathu. we are reading just to have a time pass, adhulla oru azhukaachi illai endraal thathuvakadhai padikkarathukku romba porumai irukkarathu illai….
Jaya.
Oct 01, 2009 @ 07:14:10
சாண்டில்யனைக் கண்டிப்பாக வாசியுங்கள் ஜெயா!!! வர்ணனைகளும், போர் காட்சிகளும் அருமையாக இருக்கும்…பல புத்தகங்களை நான் பல முறை வாசித்திருக்கிறேன்….
Oct 08, 2009 @ 07:42:27
Hi jaya,
I’m also Ramani amma fan. Please send the books to me also otherwise send the link to download i have tried many times but it is not downloading..
Thanks ma…
Oct 16, 2009 @ 04:15:16
ஹாய் ஜெயா,
நான் பாலகுமாரன் புக்ஸ் நிறைய படிச்சிருக்கேன், நான் இந்திய-விக்கு வந்திருந்த போது நான் 12 புக்ஸ் வாங்கினேன். நல்ல வேலை என் கணவருக்கும் புக்ஸ் படிக்கிற ஆர்வம் இருக்கு, அனால் அவர் ஒரு புக் இரண்டு மாதம் படிப்பார் நான் 1 வாரத்தில் முடிப்பேன் (இது ஜனனி பிறப்பதக்கு முன்னால்). இப்பொழுது கண்டிப்பா அது முடியாது. I used to go library every 2 weeks once, now I have to start again. May be I will go next week. என் மாமனார், sister inlaw -விக்கும் நோவேல் பிடிக்கும், ஒரு புக் வாங்கினால் நாங்கள் அனைவருமே படிப்போம். என் sister inlaw likes ரமணி சந்திரன் புக்ஸ், நானும் சில படித்துள்ளேன், ரமணி சந்திரன் புக்ஸ் எல்லாமே (நான் படித்த புக்ஸ்-ல) முதலில் கதாநாயகன் கெட்டவனா காண்பித்து விட்டு பின்பு நல்லவன் என்று கதாநாயகி புரிந்து கொள்ளவது தான் கதை. பாலகுமாரன் படியுங்கள், நல்ல இருக்கும். can you give me the link to get access to ramani chandran books. Thanks a lot.
Oct 17, 2009 @ 11:31:36
நன்றி கலை, முன்னாடி எல்லாம் லைப்ரரிக்கு போகாமல் பொழுது ஓடியதில்லை, இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைமை. குடும்பத்தில் எல்லாரும் படிக்கறதும் ரொம்ப நல்லது தான், ஆனா எங்கவீட்டில ரெண்டு பேர் படிக்கறதுக்குள்ளேயே உனக்கு எனக்கு என்று போட்டியா இருக்கும்… ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு சூப்பர் டைம்.
இப்போதைக்கு ரமணிசந்திரன் புக் ஆன்லைலில் இல்லை என்று நினைக்கறேன், முதல்ல அமுதா ஸ்கேன் பண்ணி போட்டுகிட்டு இருந்தாங்க, அப்புறம் டெக் சதீஷ் வெப்சைட்டில் இருந்தது.. இப்போ அவரும் எடுத்திட்டார். என்கிட்டே மெஷின்ல தான் இருக்கு… எப்போவாவது மீட் பண்ணும் போது சி.டி ல போட்டு தரேன்
ரமணிசந்திரன் புக் ஹிரோ எல்லாம் ஒரு பயங்கர ஃபான்டசிதான். ஏதோ பொழுது போகிறதோட சரி
ஜெயா.
Dec 16, 2009 @ 08:42:57
hai,
nan ramanichathiran big fan . 10 or 15 book padithu irrukarn. iam in bomby. ennaku ramanichathiran books online kuidaythal mail pannu ka. thanks.
Dec 18, 2009 @ 03:25:36
எனக்கென்னமோ இந்தப் பதிவுக்கு மட்டும் இத்தனை பின்னூட்டம் வர்றது கொஞ்சம் கடுப்பா இருக்கே???
Jan 02, 2010 @ 18:38:59
I only see the attaipadams of all RC novels(Rani muthu). Even one page I could’nt read. Boring really. I know most of the housewives read those novels. How is it possible ?
In female writers I am big fan of Shivasnkari’s novels & articles, there will be some good thoughts in all her novels.
Why you did’nt try some uruppadiyana novels ?
Your style of writing in the blog is very interesting. I am also joining in the nallavanga list “Why dont you try to write a novel”
Cheers, Sendhil
Jan 29, 2010 @ 09:01:57
hi sendhil,
என்ன இது எப்படி படிக்கறீங்க என்று கேட்டு அவமான படுத்திட்டீங்க.. கையில் புக்கை வைச்சுகிட்டு கண்ணாலத்தான் படிக்கறது, இல்லையென்றால் டிரட்மில் மேல வைச்சு நடந்துகிட்டே படிக்கறது… ஏங்க நாங்க திருந்தறத்துக்கு புக் படிக்கபோறோமா இல்லை இருக்கிற (??) அறிவை வளத்துக்கறத்துக்கு படிக்க போறோமா, படிக்கும் போது, நடக்கறதில்ல ஒரு கண், ஒரு காதில் ஒலித்துக் கொண்டு இருக்கும் பாட்டு, நேரத்தில் ஒரு கண் – இந்த சூழ்நிலையில் நாங்க என்ன நிலாவுக்கு ராக்கெட் அனுப்புற புக் படிக்க முடியுமா இல்லை தன்னையே அலசி போடுகிற முன்னேற்ற புக் படிக்கறதா இல்லை அறிவுக்கு தீனி போட்ற புத்தகத்தின் கன்டென்ட் தான் மூளையில ஏறுமா?
சப்பையா ஒரு ஹிரோ ஹிரோயின், ஏதாவது ஒரு சின்ன சண்டை, அதுல ஒரு டிவிஸ்ட் ஒரு சுபம் இது போதாதா? இந்த வரைமுறைக்கு ரமணி சந்திரனே அதிகம்
உருப்படியான நாவல்களை படிக்கலாம், அதுக்கெல்லாம் இன்னும் வயசிருக்கு
நாவல் தானே, கண்டிப்பா எழுதினா போச்சு, நிறைய பேரோட வாழ்க்கை சம்பவங்கள் இருக்கு கதை கருவா, எழுதனும்… நரேஷ், உங்களுக்கு எங்கேயாவது பீதி கிளம்புதா என்ன?
ஜெயா.
Jan 30, 2010 @ 17:39:55
Jaya,
If Ramani Chandran read this Blog, what she will feel
Ivanga pugazzrangala illa kavukkirangla onnumae puryalauae..ba
Cheers, Sendhil
Feb 02, 2010 @ 14:07:58
Hi Jaya,
Just i was in search of Ramanichandran novels and happened to read this blog…Wow this blog is very interesting and made me remeber my early days…
Feb 03, 2010 @ 14:13:23
sendhil,
இதெல்லாம் அரசியல்ல சகஜமய்யா
ஜெயா, நல்வரவு, நன்றியும் கூட.
ஜெயா.
Feb 05, 2010 @ 04:47:32
hi jaya,
very funny and interesting article to read. really i was laughing hard while reading. enjoyed a lot. i came out of the rut of reading RC books a while back but this makes want to read again just to have some fun.
Feb 05, 2010 @ 16:03:02
hi ugi,
thanks for the compliment, idhellaam yosikkave koodathu, just grab a book and start revising
Jaya.
Feb 05, 2010 @ 19:31:00
Jaya,
You mentioned you have some themes & real time stories in hand.
So we can see lot of impacts of RC novels in yous since you keep revising her novels. All the best !
Cheers, Sendhil
Feb 14, 2010 @ 23:10:03
திருமதி ஜெயா அவர்களுக்கு பிசாசு எழுதுவது , உங்கள் ப்ளாக் தற்செயலாக எனக்கு கிடை தது. ரமணி சந்தரன் பற்றிய உங்களக்கு நேர்ந்த அத்தனை நிகழ்வுகளும் எனக்கும் வந்தது. எனக்கு வரவேண்டிய மனைவி இப்டித்தான் இருக்கவேண்டும் என்று ஒரு imagineation உருவானது அப்போது . ஆனால் வி preposed god disposed என்பது போல் எனக்கு கிடைத்த wife கௌண்டமணி மாத்ரி சொலவதானால் superappu . அது என் சொந்த கதை சோக கதை . என்னிடம் இருந்த 50 கும் மேற்பட்ட ரமணி சந்திரன் புக்ஸ் எனது சகோதரியால் சுடப்பட்டு விட்டன என்பதை தெரிவிகேறேன் . தங்களுக்கு ஆர்வம் இருந்தால் பா. ராகவன் எழுதிகிற புக்ஸ் படிக்வம் . தற்சமய அரசியல் terrosits இன்டர்நேஷனல் historical events பற்றி தெளிவாக எழுத் கிறார் . மற்றும் தங்கள் எழுத்தகள் மிகவும் நன்றாக இருகின்றது .
pissasu
my mail id pissasu2008@gmail.com
Feb 14, 2010 @ 23:21:54
One of the best review about the ramani chandaran http://dondu.blogspot.com/2006/06/1.html
Plz visit every one to thiz blog.
pissasu 2008
Feb 14, 2010 @ 23:23:40
“தவம் பண்ணி விடவில்லையடி”, “கனவு மெய்ப்பட வேண்டும்”, “கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு”, “மை விழி மயக்கம்”, “நேசம் மறக்கவில்லை நெஞ்சம்”, “காத்திருக்கிறேன் ராஜகுமாரா”, “எனக்காக நீ”, “பொன்மானைத் தேடி”, “விடியலைத் தேடி”, “கானமழை நீ எனக்கு”, “தரங்கிணி”, “அழகு மயில் ஆடும்”, “நாள் நல்ல நாள்”, “இனி வரும் உதயம்”, “கிழக்கு வெளுத்ததம்மா’, “என் உயிரே கண்ணம்மா” போன்றவை//.
SOME OF THE BEST NOVELS BY RAMANI CHANDARAN.
PISSASU2008
Feb 17, 2010 @ 07:41:03
நன்றி பிசாசு அவர்களே, என்ன செய்வது அவரவர் கதை அவரவருக்கு
உங்களுக்கு மனைவி என்றால் எனக்கு கணவர்… உங்கள் சகோதரி எங்கள் கும்பலில் ஒருவராக வாய்ப்புகள் இருப்பதால், நாங்கள் அவர் பக்கம் தான்
பா.ராகவனின் அலகிலா விளையாட்டு படித்து ஆடிப்போய் இருக்கின்றேன்… என்னமா எழுதி இருக்கின்றார் மனுஷன்… அடேங்கப்பா ஆச்சரியத்தில் இருந்து விடுபடவில்லை இன்னும்.. ஆனால் சர்வதேச அரசியல், தீவிரவாதிகள் எல்லாம் நம் ரேடாரில் இல்லை என்பதால் அது பக்கம் எல்லாம் போவதில்லை… வேறு புத்தகங்கள்தான் படித்து பார்க்க வேண்டும்.
உங்கள் லிஸ்ட்டில் உள்ள காத்திருக்கின்றேன் ராஜகுமாரா எல்லாம் மொக்கை நம்பர் ஒன்று… கொஞ்சம் நிலவு கொஞ்சம் நிலவும் அப்படிதான். மற்றவை நல்ல புத்தங்கள் தான் எங்கள் அபிப்பிராயப்படி
ஜெயா.
Jun 10, 2010 @ 07:13:00
இன்றுதான் தங்களுடைய blogஐ கண்டுபிடித்தேன். ரமணிசந்திரன் அவர்களின் நாவல்களைப் படிக்கும் groupல் நானும் இணைநது கொள்கிறேன்.(ஜோதியில் ஐக்கியமாவதாகக்கூட வைத்துக் கொள்ளலாம்). ஆனால் எனக்கு நான் எங்கு சென்றாலும் முதலில் வர வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இந்த groupலும் நான் முதலில் இருப்பதாகப் பெருமைப்பட்டக் கொள்ளலாம், ஜெயமாலினி அவர்களின் மனசு, எண்ணம் ஒரு வரி மாறாமல் எனக்கும் பொருந்தும். என்ன ரமணிசந்திரன் அவர்களின் கதையைத் தொடர்கதையாகப படிக்கும் சந்தர்ப்பம் என் ஸ்கூல் டேஸில் அதிகமாகக் கிடைக்கவில்லை. கடந்த 3 வருஷங்களில் கிட்டத்தட்ட ரமணிசந்திரன் நாவல்கள் படிப்பதைத் தவிர வேறு வேலை எதுவுமே உருப்படியாக செய்வதில்லை. அதுவும் ஆன்லைனில் புத்தகங்கள் கிடைத்த பிறகு(தற்போது கிடைப்பதில்லை) lending library போக வேண்டிய அவசியம் வேறு இல்லாததால் நாளின் பெரும்பகுதி system முன்பு உட்கார்ந்து கொண்டு இன்னும் அதிக நேரம் படிக்க முடிகிறது. ஒவவ்வொரு புத்தகதையும் எவ்வளவு முறை படித்திருக்கிறேன் என்ற அநாவசிய கணக்கெல்லாம் வைத்துக் கொள்வது கிடையாது. சிந்து பைரவி படத்தில் நடிகர் சிவக்குமார் அவர்கள் ஒரு இடத்தில் இசையைப் பற்றி சொல்வார் – இசைப்பது ஒரு இன்பம், இசையைக் கேட்பது ஒரு இன்பம். ஏன் இசையைப் பற்றி பேசுவது ஒரு இன்பம் என்று. அந்த டயலாக் இங்மேயும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
Nov 26, 2010 @ 06:10:50
hello pa………………
naan kooda unga group than…………………..jeya akka ungala mathiri than nanum iruken……………………ennaum unga group-la sethukareengalaa????????????????
Dec 03, 2010 @ 11:55:51
the blog post was good! Lol! More than ur post the discussions were superb! Keep blogging!
Dec 10, 2010 @ 08:42:00
Thanks deepika!
Dec 03, 2010 @ 13:01:46
please send me some novels if u find time. my mail id dpadu1@gmail.com. thanks in advance!
Dec 10, 2010 @ 08:42:39
Sure, Check you email, I have sent you a link where you can download all the novels
Jaya.
Dec 09, 2010 @ 15:47:36
very nice narration and interesting to read like rc novals. I like your sense of humour
Dec 10, 2010 @ 08:44:08
மிக்க நன்றி. இப்படி எல்லாம் யாராவது பாராட்டினால் தான் எழுத வரும் போல இருக்கிறது. இந்த பக்கம் வந்தே ரொம்ப நாள் ஆகிவிட்டது. கண்டிப்பாக திரும்ப எழுதவேண்டும்…
ஜெயா.
Dec 09, 2010 @ 19:43:47
hi jaya,
i loved ur blog . rc novelsa vida very interesting. naanu enoda frndu idha sirichikite thaa padicho.. kaala kaalama ethna generations vandalu girls ela ore madri thaa think pannuvo pola..
Dec 10, 2010 @ 08:46:14
சேம் ப்ளட். நாம எல்லாம் திருந்திட்டா, பூலோகம் மாத்தி சுத்த ஆரம்பிச்சுடாதா ஹரிணி? அதனால் என்ன என்ன குழப்பம் வரும் என்று யோசிச்சு பாருங்க. அதனால, அந்த அந்த நல்லெண்ணத்தாலதான் நாம திருந்தாம இருக்கோமே..
ஜெயா.
Jan 06, 2011 @ 15:11:26
நானும் புத்தக புழு தான் என்றாலும் , ரமணி சந்திரன் நாவலில் ஒரு வரி படித்ததில்லை. நாங்க இந்திரா சௌந்தர்ராஜன்,மதன், சுஜாதா,பாலகுமாரன், எஸ்.ராம கிருஷ்ணன், சாரு நிவேதிதா..இப்படி வேற பாதையில போய்டதால தப்பிச்சேன்.
உங்க எழுத்து நடை நல்ல இருக்கு. ஆனா பெரிய பெரிய பாராவா எழுதி மூச்சு வாங்க வைக்கிறீங்க. பதிவுலகில் ஒரு உண்மைதமிழன் போதாதா..
-வால் பையன் (Adventnet)
Jan 07, 2011 @ 10:49:05
வால் பையன்,
படிக்கலை என்று எல்லாம் ஃபீல் பண்ணதேவை யில்லை என்பதை தானே நானே பத்தி பத்தியா எழுதி இருக்கிறேன்
நானே பெரிசா எழுதின பதிவு இதுதான், அதனால தான் கொஞ்சம் பத்திகள் பெருசா விழுந்து இருக்கிறது.. மிச்சத்தை படிச்சு பாருங்க, எல்லாமே ஒரு பத்திதான் இருந்து இருக்கும்
ஜெயா.
Jan 11, 2011 @ 15:39:56
Jaya kalakitteeengaaa…. appadiyae enna 20 yrs back kondu poitteeenga… i was also crazy of ananda vikatan that time .. like you rightly said it was more informative those days….absolutely no cinema news in AV.. but now its the other way round. Please share the list of RC novels. Here also we dont have public libraries.. Just like yamini i also have downloaded RC novels from net
Thanks to that punniyavathi who took pains to scan and upload it..
Aarthi
Jan 19, 2011 @ 09:32:10
Hi jaya am sharmil
from trichy, ithai padichuttu ennaku ore sirrippu tan athu eppadinga 5th 6th padikum pothey sister-in-low pathi yosichinga realy great. sharmilcebuu@gmail.com this is my id pls ennakum konjam ramani chandran story anupunga pls
Jan 22, 2011 @ 13:24:03
hi,
today I went to police station to give some complaint and meet the inspector.
one lady police in the reception asked me to sit in the chair and to wait.She went to her seat which was next to me. Her eyes were often moving below the table. Naama summa viduvoma, enna panrangannu lighta gunichu paartha, RC novel open panni vachi irukkanga!.
Ella pengalum orae kuttaiylae oorna mattaigalthan…:)) Just for fun,,
Kumar
May 16, 2011 @ 14:12:56
hi jaya
nanu rc fan tha but en alavuku nenga padikalanutha soluva
May 16, 2011 @ 14:16:55
na oru book koranchathu 20… timesku mela paducuhrupa. en sister ena vida oru padi mela., enga vitla amma chithi patti elarume RC fans tha athu en patti RC book thavira vera kondu vantha avalatha thodakuda matanga. avangale padikarapa namakena.., solunga. ena oru diff mothala bookla paduchutu iruntho ipa sys padikaro avalatha matha padi antha aarvam ipa konja kami aaiduku tats all
Jan 28, 2012 @ 10:20:51
hi mam,
Really i dont have any words to say.. Its just like my life history…
only few differences, i didnt get a friend like yours and i found ramani novels in online in my college days itself… Presently i am pursuing my undergraduate… really thank you… for your writing.. bcoz its just like.. what i felt inside… got some clear idea…. about reading.. thank you mam… now i think how much crazy i was.. reading ramani novels even the day before of university exams…also on the morning of my college tests…. Really an amazing… yoy have made an good analysis about yourself…
Jan 28, 2012 @ 10:51:24
nice blog… fully laughing.. wen i read it…….if u have any novels of her.. just mail me… nams.pitam@gmail.com
Feb 26, 2012 @ 14:45:53
sorry mam..its namspitam@gmail.com
Mar 13, 2012 @ 12:17:50
எப்படிப்பா இப்படி…. இது நாள் வரைக்கும் நம்ம பொழப்பு மட்டும் தான் கெட்டு போயிருக்குன்னு நினைச்சா நம்மள மாதிரி நிறைய அடிமைகள் இருக்கறதா நினைச்சா மனசுக்கு நிறைவா இருக்கு….this is the first time am entering in to this……anyway நானும் full-ah படிச்சுட்டேன் மிச்சம் ஒன்னும் இல்ல… இத விட கேவலமான விஷயம் என்னனா எல்லா புக்கோட hard copies-a எனக்கிட்ட இருக்கு 100 க்கு மேல
Mar 22, 2012 @ 00:10:36
Unamiyave romba santhosama irukkuthu..Nammala madhitriye ethanai perunnu…. Agaaa.. If u dont mine pls send me RC books links…
Thank u jeya..
Mar 22, 2012 @ 03:00:33
Malini, Kootam koodigittae pogudhu..Katchi aarampitcha neenga CM aa kooda agidalam?
Mar 23, 2012 @ 07:53:50
hiii everybody specially Raji using below link u can download complete RC book… no worries
http://www.chillzee.com/books-menu/ramani-chandran-books
Enjoy well………
May 10, 2012 @ 18:12:55
Thank u so much..
May 11, 2012 @ 17:22:34
Hi,
Should say that ur words almost 90% reflected my school / college days
I was searching google to write an article about Ramani Chandran
and got a chance to read this post…Though I didn’t get any info I was looking for, I should say your writing is excellent 



Excellent post
Sometimes heart wins over brain and that’s true w.r.t Ramanichandran books too
ரொம்ப நல்லா எழுதுறீங்க… நீங்களும் கதை எழுதலாம்னு நினைக்கிறேன்
And BTW, co-incidentally, I am planning to write the article about Ramani Chandran in the above mentioned site (chillzee) only… Google is doing multi tasks
Nice to meet you via this page, dear friend….
May 14, 2012 @ 18:44:52
Hi jeya madam…
I read your page while i am searching for rc novels. Nice to meet you through this page. I read some rc books only. It is good for entertainment. Please send me rc books. My mail id
rcjesintha@gmail.com