ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்த போது, கீழ் வீட்டில் குடியிருந்த வரலாற்று ஆசிரியையிடம் இருந்து கடன் வாங்கி படித்தது சிவகாமியின் சபதம். மிகவும் ரசித்து படித்த புத்தகம். கண்ணெதிரெ காண்பது போன்ற பிரமையும், நிறைய நாள் அதன் பாதிப்பிலிருந்து வெளியே வர முடியாத படிக்கு இருந்தது. அது படித்து முடித்த கையோடு பொன்னியின் செல்வனும் அவர்கள் வீட்டிலே இருந்து எடுத்து படிக்க முற்ப்பட்ட போது, ஏனோ பிடிக்காமல் போனது. படித்தது என்னமோ ஒரிரு அத்தியாயங்கள் தான்,அதில் முதலில் வரும் சைவ வைணவ கருத்துகள் தான் காரணம் என நினைக்கிறேன். அதற்க்கு பிறகு ஒரு தரம் பார்த்திபன் கனவு படித்தேன், அதிலும் நரசிம்மவர்மரின் குணாதியங்கள் அவ்வளவு அருமையாக இருந்த நினைவு.
அதன் பின்னர், பல்வேறு சூழ்நிலைகளில் பொன்னியின் செல்வன் படித்ததில்லை என்று கூற வேண்டி இருந்த போது எல்லாம், சே அந்த புத்தகத்தை விட்டு வைத்திருக்கின்றோமே, எப்படியாவது படித்தே தீர வேண்டும் என்ற வேட்கை அதிகமாகி கொண்டு இருந்த்து. ஜனவரி மாதம் என்றால் எல்லா வாசகர்களையும் பிடித்து ஆட்டும் புத்தக கண்காட்சி என்னையும் ஆட்க்கொண்டு, வானதி பதிப்பகத்தின் பொன்னியின் செல்வனை வாங்கியே தீர வைத்தது.
இவ்வளவு நாளாக நம் கண்களில் இருந்து தப்பி இருந்த புத்தகத்தை படித்தே தீர வேண்டும் என்ற ஆவலில் ஆரம்பித்தேன். முன்பு போல இல்லாமல், இப்போது குடும்பம், குட்டி, ஆபிஸ் என கால் கட்டுகள் அதிகமாகி விட்ட படியால் எடுத்த கையுடன் முடிக்க முடிய வில்லை, ஆயினும் பஸ் பிரயாணங்களில், எங்கள் வீட்டு தெருவில் இருந்து மெயின் ரோடு வரையில், ஷேர் ஆட்டோவின் குலுக்கலில், பஸ் நிலையத்தில் இருந்து என் சீட் வரை, அலுவலக ஜிம்மின் டிரட்மில் என கிடைத்த கேப்பில் எல்லாம் படித்து கொண்டு இருந்தேன்.
வெற்றி கரமாக நேற்றோடு ஐந்து பாகங்களையும் முடித்தேன். ஆகா என்ன அருமையான புத்தகம். சும்மாவே காவிரியை பார்த்தால் எனக்கு பாசம் பிய்த்துக் கொள்ளும். எனக்கு காவிரியின் அருகே பிறக்கும் பயனோ அல்லது வளரும் பயனோ இல்லாது இருந்தாலும், என் வீட்டுகாரருக்கு இருந்து இருக்கிறது. அவர் வீட்டுக்கு செல்லும் போது எல்லாம், அந்நதியை பார்த்தால் கொள்ளை ஆசையாக இருக்கும். இளங்கோ அடிகள் பாடிய, நடந்தாய் வாழி காவேரி செய்யுள் ஞாபகம் வந்து கொண்டே இருக்கும். எவவளவு ஆயிரம் ஆண்டுகளாக இந்நதி இப்படி ஓடிக்கொண்டு இருக்கின்றது, எத்தனை விதமான மக்களை, நாகரீகங்களை பார்த்திருக்கும். எத்தனை பேர் இதனால் பயனைடைந்து இருப்பார்கள், எவ்வளவு பேர் வாழ்க்கைக்கு இது உதவியாக இருந்து இருக்கும். இதற்கு வாய் இருந்தால் என்னிடம் என்ன பேசும் என கற்பனையில் ஆழ்வேன். அந்நதியை சூழ்ந்து இருக்கும் அமைதி அப்படியே நம் உள்ளத்திலும் நிறைந்து வழியும். இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது அது இன்னும் ஒரு நூறு மடங்கு அதிகமாகி விடும் போல இருக்கிறதே. அடுத்த முறை கும்பகோணம் செல்லும் போது காவிரி பக்கம் ஒரு பாய் எடுத்து கொண்டு போய் அங்கேயே தங்கிவிடுவேன் என நினைக்கிறேன்.
அடுத்ததாக என் மனதில் எப்போதுமே இருக்கும் ஆசை, காலம் அப்ப்டியே பின்னால் சென்று விடக்கூடாதா.. பார் வியக்க ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்களின் காலங்களில் மக்கள் இப்படி இருந்தனர் அப்படி இருந்தனர் என்ற செய்யுள்களும் பாடல்களும் எவ்வளவோ படித்து இருக்கிறோமே அந்த காலத்தில் நாமும் வாழ்ந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும்… தமிழ் செய்யுள்களை மற்றும் வரலாற்றை ஆர்வமுடன் படித்தவர் அனைவருக்குமே அப்படி ஒரு எண்ணம் இருக்கும் என நினைக்கிறேன். பெண்ணாய் பிறந்தவர்கள், பெண்களுக்குரிய குணங்கள் அனைத்தும் பொருந்தியவர்களாய், வீட்டில் இருந்து மேற்ப்பார்வை பார்ப்பவர்களாய், வயல் வேலை செய்து கொண்டும் ஆண்களை பராமரித்து கொண்டும் காலம் தள்ளியிருப்பர். பதிமூண்று வயதில் கல்யாணம் செய்து கொண்டு பதினைந்து வயது கணவனோடு குடித்தனம் நடத்துபவரா இருந்திருப்பர். பள்ளிக்கூடம், கல்லூரி படிப்பு, டியுஷன், மதிப்பெண்கள், பின்னர் வேலை, கல்யாணம், இருவர் சம்பாத்தியம், housing loan, சிசேரியன், பிள்ளைகளின் கான்வென்ட் படிப்பு, டி.வி., மெகாசிரியல் என இயந்திரத்துவமாக இல்லாமல் வாழ்க்கையை எப்படி அனுபவத்து இருந்திருப்பர். ஆண்களாக இருந்தால் இன்னும் குஷி. அழகாக ஒரு வாளும் வேளும் எடுத்துகொண்டு போருக்கு கிளம்பி விடலாம். அதிர்ஷ்டம் இருந்தால் திரும்ப உயிரோடு வரலாம், இல்லை யென்றால் வீர மரணம் அடைந்தான் என பெருமை படலாம். இல்லை யென்றால் இருக்கிறது பைந்தமிழ் – அதில் ஒரு புலவராகி மொழிச்சேவை செய்து சத்திரம் சாவடி என வாழ்க்கை கழிந்து விடாதா? கம்ப்யூட்டடாவது கோடிங்காவது மண்ணாங்கட்டியாவது? அதிலும் நாம் சைக்கிள்கேப்பில் அப்போதைக்கு செல்வாக்காக உள்ள அரச குடும்பத்தில் பிறந்து விட்டால் சொல்லவும் வேண்டுமோ? வாழ்க்கை ராஜ போகத்தில் இருந்திடாதோ? நிஜமாகவே முத்தால் வேய்ந்த மணி மண்டபங்களும், பொன்னால் ஆன மாளிகைகளும், வைர வைடூர்யங்களால் இழைத்த மணி மகுடங்களும் இருந்திருக்க கூடுமோ? சந்திர குப்த மௌரியரும், மாவீரர் அசோகரும், நரசிம்ம வர்ம பல்லவரும், கிள்ளிவளவனும், வல்வில் ஓரியும், மனுநிதி சோழனும், பொன்னியின் செல்வரும் எப்படித்தான் இருந்திருப்பரோ?
ஹும்… என்ன செய்வது, பெருமூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லை எனக்கு. நிஜமாகவே இந்து மதம் சொல்லுகின்ற மறுபிறவிக்கதையும், நாம் எத்தனையோ ஆயிரம் பிறவிக்ள் எடுத்து இருக்கிறோம் என்பது உண்மையானால் ஏதோ ஒரு ஜன்மத்தில் இவர்கள் காலத்தில் வாழ்ந்து இருக்க் மாட்டோமா? முக்கிய காரியங்களில் உடனிருந்திருக்க மாட்டோமா என்ற ஏக்கத்தை மறைக்க முடிவதில்லை.
பொன்னியின் செல்வன் – எளிய நடையில் எழுதப்பட்டு இருக்கும் அருமையான புத்தகம். மிக சிறந்த கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான நிகழ்வுகள், அழகான வர்ணனைகள் என இரண்டாயிரம் பக்கங்கள் போவதே தெரியாமல் நம்மையும் சோழ காலத்திற்க்கே கொண்டு செல்லும் அற்புத படைப்பு.
மந்தாகினி தேவியார் இறந்து போகும் தருணத்தை கடற்க்கரையில் வெங்கட் மற்றும் அகில் கடலில் விளையாடிக்கொண்டு இருந்த போது படித்துக் கொண்டு இருந்தேன். சற்று நேரம் கழித்து என்னை திரும்பி பார்த்த வெங்கட் அதிர்ந்து போய் கரைக்கு வந்தார். என் கண்கள் இரண்டிலிம் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அடிப்பாவி எவனோ இரண்டு அடி போட்டு விட்டு போனதை போல உட்கார்ந்து அழுதுகொண்டு இருக்கிறாயே என்ன ஆயிற்று என்று. கதையில் வரும் ஒருவர் இறந்து விட்டார் என்று கூறவும் அவர் விட்ட ஒரு பார்வை இருக்கின்றதே….
அருள்மொழி வர்மரின் முதற் தோற்றமும், வல்லவரையனும் ஆழ்வார்க்கடியானும் சம்பாஷித்து (வார்த்தை பிரயோகத்தை கவனிக்கவும்) கொள்ளும் காட்சிகளும், பெரிய பழுவேட்டரையர் இறக்கும் தருவாயும், பூங்குழலியின் கற்பனைகளும் சமயோசித புத்தியும், இளைய பிராட்டி மற்றும் வானதியின் நட்பும், நந்தினியின் அழகும் சூழ்ச்சிகளும், தஞ்சை, பழையாறை, இலங்கை ஊர்களி வனப்பும் வர்னணையும் அடடா எதை பாராட்டுவது, எதை விடுவது? கண்டிப்பாக இன்னும் நான்கைந்து முறை படித்தாலும் அலுக்காது என நினைக்கிறேன். படிக்கும் போது, அனைவருக்கும் உரிய ஒப்பீடும், பொறாமையும் வேறு தலை நீட்டுகிறது, நந்தினி அழகிற்க்கு நாம் இருந்தால் எப்படி இருக்கும்? பூங்குழலி அளவிற்கு தைரிய சாலியாகவும், பிரயோஜனபடுபவளாக நாம் இருந்திருப்போமா? இளைய பிராட்டியைபோல அன்பில் சிறந்தவளாகவும், அனைவரும் அடி பணியும் செல்வாக்கும் கையக படுத்தி இருந்திருப்போமா? வானதியை போல அதிர்ஷ்ட சாலியாக அருள்மொழி வர்மரை கல்யாணம் செய்து கொள்ளும் பாக்கியம் கிடைத்து இருந்து இருக்குமா என கேள்விகள் குடைந்து கொண்டு இருக்கின்றன மனதினுள்…
அருள்மொழிவர்மர் – அப்பா!! எல்லா நல்ல குணங்களின் உறைகடல் என சொன்னால் மிகையாகாது என நினைக்கிறேன். அவருடன் சேர்ந்த வல்லவரையன் அவர் நற்குணங்களை பார்த்து வியந்து அவரை போல் ஆவது, மற்றும் பேசுவது எல்லாம் ரசிப்பிற்குரியன. சே, அப்படி எல்லாம் பிறப்பதற்க்கு நிச்சயம் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்… ஆதித்த கரிகாலன் இறப்பது, அதில் சூழ்ந்துள்ள மர்மம் எல்லாம் ஒரு திரில்லர் கதையை போல் அல்லவா இருக்கிறது. பழுவேட்டரையரும் கரிகாலனை கொல்ல வில்லை, நந்தினியும் கொல்ல வில்லை என்றால் யார்தான் கொன்றது?
நந்தினியின் கையில் மாட்டிக்கொண்டு, காதல் வலையில் சிக்கிக் கொண்டு பின்னர் உயிரையும் இழக்கும் மணிமேகலை எல்லார் மனதிலும் சோக கீதம் மீட்டிக் கொண்டு இருப்பாள் என்பதில் லவகிலேசமும் (மீண்டும் வார்த்தை பிரயோகத்தை கவனிப்பீர்களாக) சந்தேகம் இல்லை.
இவர்கள் மற்றும் அல்லாமல் சிறு கதாபாத்திரத்தில் வரும் அனைவரும் கூட நம் மனதை கொள்ளை கொள்ளும் படியாக கல்கி எழுதி உள்ளார் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. நகைசுவைக்கு பஞ்சமே இல்லாத நாவல் என்று சொன்னால் மிகையாகாது. பஸ்ஸில் பயணித்து கொண்டு இருந்த போது, சட்டென்று சத்தம் போட்டு சிரித்த என்னை கையில் புத்தகத்தை பார்த்து மன்னித்து விட்டார்கள் என்று சொன்னால் அது தவறல்ல. முக்கியமாக குடந்தை சோதிடர், தான் சொல்லும் சோதிடம் பொய்யானால் தன்னுடைய ஏடுகளை எல்லாம் காவிரியில் எறிந்து விடுகிறேன் என்று சொல்லும் போது, ஆழ்வாருக்கடியான், நக்கலாக, நீர் போட தேவையில்லை, அவளே எடுத்துக் கொண்டாள் என்று காவிரி வெள்ளத்தை காட்டும் காட்சியில் அடக்க முடியாமல் சிரிப்பு பீரிட்டு வந்தது. அருள்மொழிவர்மர் தன் அரியாசனத்தை உத்தம சோழரான சேந்தன் அமுதனுக்கு கொடுத்ததோடு முடியும் கதை, அவர் ராஜராஜ சோழனாக முடிசூட்டிக் கொண்டு சாதித்தவைகளையும் கூறி இருந்தால் கூட ரொம்ப நன்றாக த்தான் இருந்திருக்கும்… இனையத்தின் உதவியோடு பல நாவல்கள் பேர் கிடைத்தாலும் அனைத்திலும் ஒரு வார்னிங் என்னவென்றால் அது பொன்னியின் செல்வனை போல் இராது என்பதுதான். இறந்து ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அரிய சாதனைகள் செய்தவர்களை பற்றி இன்னமும் உலகம் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கின்றது. சே நாம் என்ன செய்ய போகிறோம் இந்த உலத்தில் வாழ்ந்து என்ற எண்ணம் வேறு வாட்டி எடுக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் ஒரு படிப்பு படித்து, ஒரு அலுவலகத்தில் குப்பை கொட்டிக்கொண்டு, தன் காலில் நின்று கொண்டு இருப்பதே போதும் என்று மூளையின் ஒரு பக்கம் கூறினாலும் முழுவதாக ஒத்துக் கொள்ள முடியவில்லை.
இப்படியாக ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வரலாற்று புத்தகத்தை படித்து முடித்த கையோடு அலுவலக நண்பர் வைத்து இருந்த காவிரி மைந்தன் மீது ஆட்டையை போட்டு இருக்கிறேன். அது எப்படி போகிறது என்று பார்க்கலாம். இப்போ வந்து யாராவது பொன்னியின் செல்வன் படித்து இருக்கின்றீர்களா என்று கேளுங்கள், நான்கு நாளைக்கு மூச்சு விடாமல் பேசுவோமில்ல…
ஜெயா.
Feb 27, 2009 @ 14:55:25
அடேயப்பா ஜெயா… “முதல் தடவை தான். அடுத்த முறை இதை படிக்கும் போது இன்னும் அனுபவிச்சு படிக்கணும்” என்று எல்லாம் சொன்னீங்க. கம்மியா அனுபவிச்சு படிச்சதுக்கே இப்படின்னா. இன்னும் இரண்டு மூன்று முறை படிச்சீங்கன்னா நீங்கலே ஒரு வரலாற்று நாவல் எழுதிடுவீங்க போலிருக்கே.
நான் கடைசியாயா பொ. செல்வன் படிச்சு குறைந்த இரண்டு வருடமாவது இருக்கும்னு நினைக்கிறேன். உங்களோட இந்த பதிவைப் படிச்சதும் என்ன தோணுச்சு தெரியுமா/ மறுபடி இன்னொரு முறை படிக்க ஆரம்பிக்கணும்னுதான். அப்படி ஒரு ஆசையை நீங்கள் அணு அணுவாய் வர்ணித்து கிளப்பிவிட்டு விட்டீர்கள்.
அப்படியே சரளமா இருக்கு எழுத்து நடை. இப்படி ஒரு புத்தகத்தை படித்ததாலா? அழகான விஷயத்தை பற்றி பேசும் எதுவுமே அழகாய்தான் இருக்கிறது.
//ஆயினும் பஸ் பிரயாணங்களில், எங்கள் வீட்டு தெருவில் இருந்து மெயின் ரோடு வரையில், ஷேர் ஆட்டோவின் குலுக்கலில், பஸ் நிலையத்தில் இருந்து என் சீட் வரை, அலுவலக ஜிம்மின் டிரட்மில் என கிடைத்த கேப்பில் எல்லாம் படித்து கொண்டு இருந்தேன்.//
உண்மையிலயே இது பெரிய்ய விஷயம் ஜெயா. உங்களுக்கு சாதாரணமா தெரியுது.
//இளங்கோ அடிகள் பாடிய, நடந்தாய் வாழி காவேரி செய்யுள் ஞாபகம் வந்து கொண்டே இருக்கும்.//
காவிரியின் அருகே பிறந்து வளார்ந்தவன் என்பதால் இதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
பொன்னியின் செல்வன் பிரியர்கள் எல்லாருக்குமே ஒரு குறை இருக்கிறது. அது இப்படி ஒன்றை படமாகவோ, தொடராகவோ ஏன் யாரும் எடுக்க முன்வர வில்லை என்பதே. ஆனால் கலைஞர் டீவி சைலண்டா எடுத்துக்கிட்டிருந்தாங்கன்னு சொன்னாங்க. இப்போ அது எந்த நிலைமையில இருக்குன்னு தெரியலை. இதை முதலில் கேள்விப்பட்ட போது நண்பர்கள் எங்களுக்குள் நிகழ்ந்த விவாதம், நந்தினியாய் நடிக்க தகுதியானவர் யார் என்பதே. நான் ரம்யாகிருஷ்ணனை சொன்னேன். கலைஞர் டீவி சீரியலில் மீனாதான் நடிக்கிறார் என்று பின்னால்தான் செய்தி சொன்னார்கள். அதுவும் நல்ல சாய்ஸ்தான். ஆனால் இப்ப சீரியல் எடுக்கிறாங்களா இல்லையான்னே தெரியலை. 😦
எம்.ஜி.ஆர் காலத்துலயே இதை படமாக்க முயற்சி செய்தார்கள்னும், இருந்தாலும் வந்தியத் தேவன்தான் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அதில்தான் எம்ஜிஆர் நடிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அருண்மொழியாய் யாரை போடுவது என்பதிலும், இருவருக்கும் இடையே சண்டை நடப்பது போல வரும் ஒரு இடத்தில் வந்திய தேவன் தோற்பது போலவும் இருக்கும். அது மட்டுமின்றி இருவரும் வரும் காட்சிகளில் எம்ஜிஆர் இன்னொருத்தரிடம் அடங்கி நிற்பது போல காட்சியமைப்பதா போன்ற காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது என்றும் கேள்வி. எநதளவு உண்மை என்று தெரிய வில்லை.
பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக மொத்தம் 3 புத்தகங்கள் இருக்கின்றன. விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து நாயகி ஒன்று. இதில் போர், திருப்பங்கள் போன்றவை குறைவாகவே இருக்கும். அதனால் பல பேருக்கு இது அந்தளவுக்கு கவராமல் போய் விட்டது.
பாலகுமாரன் எழுதிய உடையார் இன்னொன்று. அருண்மொழி, ராஜராஜ சோழராய் பதவி பெற்ற பிறகு இந்த கதை தொடங்குகிறது. இதிலும் வந்தியத் தேவர், குந்தவை, அநிருத்தப் பிரம்மராயர், ரவிதாசன் போன்ற கதாபாத்திரங்கள் வருகின்றது. ஆனால் இது மிக முக்கியமாய் இன்னொரு களத்தைப் பேசுகின்றது. தஞ்சை பெரிய கோயில் கட்டிய வரலாற்றைப் பற்றி இது பேசுகின்றது. மிக முக்கியமாய் பொன்னியின் செல்வனில் அதிகம் பேசப்படாத அப்போது நிலவிய வர்ணாசிரம தருமங்கள்,மக்களின் வாழ்க்கை முறை, சிற்பிகள் அவர்களது இயல்புகள், கொல்லர்கள், மறவர்கள் அவர்கள் ஆடிய ஆட்டங்கள், அந்தணர்கள் போன்று பல விஷயங்களைப் பேசிச் செல்கின்றது. உங்களுக்கு பிடிக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள மிகப்பெரிய குறை பாலகுமாரனிற்கே உரிய சற்றே அதிக மிகைப்படுத்தல்களும், பிரச்சார வகை அறிவுரைகளும். அதை தாங்கிக் கொள்ள முடிந்தால் வெகு நிச்சயமாய் இந்த புத்தகம் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை, வரலாறு குறித்தான புதிய பார்வையைத் தரும்.
மூன்றாவது அனுஷா வெங்கடேஷ் எழுதிய காவிரி மைந்தன். கண்டிப்பாய் படிக்க நன்றாக இருக்கும். ஸ்பீடாய் நகர்ந்து விடும் மூன்று பாகங்களும். இப்புத்தகம் குறித்து எனக்கு பல விமர்சனங்கள் இருக்கின்றது. நீங்க இப்போதான படிக்க ஆரம்பிச்சிருக்கீங்க. இதை முடிங்க. அப்புறமா அதை சொல்றேன். நானும் சில குறிப்புகளைத் தேட வேண்டி இருக்கு.
இன்னும் பல விஷயங்களை டைப் பண்ண ஆசைதான். பதிவை விட பின்னூட்டம் பெரிசா போயிடும் என்பதால் இப்போதைக்கு ஜூட் விட்டுக்கறேன்.
Feb 28, 2009 @ 05:42:38
//–இப்போது குடும்பம், குட்டி, ஆபிஸ் என கால் கட்டுகள் அதிகமாகி விட்ட படியால்–//
ஆபீஸ் சரி, புத்தகம் படிக்கிறதும் சரி, ஆனா இந்த குடும்பம், குட்டின்னு சொல்றயே…உங்க அம்மாவோ, வெங்கட்டோ பாத்துட போறாங்க ஜெயா! ஏற்கனவே வெங்கட் நம்ம மேல காண்டுல இருக்காங்க… 🙂
கிருஷ்ண பிரபு
Mar 01, 2009 @ 16:38:35
மிக அருமை ஜெயா….எனக்கும் பொன்னியின் செல்வன் படிக்க வேண்டுமென்று நீண்ட நாள் ஆசை…ஆனால் இன்னும் நிரைவேறியபாடில்லை. நந்தா மேற்குரியது போல் உன்னுடைய இந்த பதிவு இந்த புதினத்தை படிக்கும் ஆவலை மேலும் தூண்டி விட்டுள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு இதை ஆற போடா வேண்டும்…நானும் PhD முடிக்க வேண்டாமா 😀
நந்தா – மக்களின் வாழ்க்கை முறை இப்போ மிகவும் மாறிவிட்டது. இந்த அற்புத படைப்பை ஒரு திரைப்படமாகவோ அல்லது சின்ன திரை தொடராகவோ எடுத்தால் எந்த அளவிற்கு வரவேர்ப்பிருக்குமென்று எனக்கு தெரியவில்லை. அப்படியே எடுத்தாலும் இதை படித்து மகிழ்ந்த வாசகர்களின் பிரமிப்பை சற்றும் குறைக்காமல் இருந்தால் சரி!
Mar 02, 2009 @ 10:12:16
நந்தா, கல்கியின் வர்ணனை கற்பனை அழகிற்க்கு ரம்யா கிருஷ்ணனும் மீனாவும் இணையாவார்களா என்ன? சத்தியமாக எனக்கு அப்படி தோன்றவில்லை, மற்றும் இதை எல்லாம் சினிமாவாகவோ இல்லை மெகா சீரியலாகவும் எடுத்தால் கண்டிப்பாக நூலுக்கு கண்டிப்பாக இணையாக இருக்காது… தன் பங்க்கிற்கு என ஆளுக்கு ஆள் கொலை செய்வார்கள். படித்து அனுபவிக்கும் இன்பம் கண்டிப்பாக பார்ப்பதில் அடைய முடியாது என்று நான் நினைக்கிறேன். ஆனால் உங்கள் பதிலிருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற புத்தங்களின் மீதும் கண் வைக்க முயற்சி பண்ணுகிறேன்.
கிருஷ்ணா: பப்லிக் பப்லிக், ரகசியங்கள் எல்லாம் இப்படி பகிரங்க படுத்தலாமா??
சிவா: அடடா நீ இன்னும் பொன்னியின் செல்வன் படிக்கலையா?? அடடா, என்ன இது சின்ன புள்ள தனமா ph.d. என்று எல்லாம் காரணம் சொல்லிகிட்டு இருக்கே… முதல்ல இதை படிக்கற வழியை பாரு… சினிமாகவோ இல்லை சின்னத்திரையிலோ எடுப்பதற்க்கு, உன்னுடைய கருத்தை ஆமோதிக்கிறேன்.
ஜெயா.
Mar 02, 2009 @ 22:43:16
great writing. especially your flow.sorry
தங்களின் தமிழ் எழுத்து திறமை மிக அருமையாக இருந்தது .
அனால் கடைசியில் ஸ்பெல்லிங் மிச்டகே செய்து விட்டிர்கள் 😉
//தன் காலில் நின்று கொண்டு இருப்பதே போது என்று மூளையின் ஒரு பக்கம் கூறினாலும் முழுவதாக ஒத்துக் கொள்ள முடியவில்லை.//
ஒரு இம் விட்டுடிங்க ஜெயா ‘)
அடுத்த முறை proof ரீடிங் ஒழுங்கா பண்ணுங்க 🙂
பி கு : எழுத்து பிழை வேண்டுமென்றே தேடி கண்டு பிடித்தது 🙂
Mar 03, 2009 @ 06:39:43
நன்றி நக்கீரரே… எழுத்து பிழையை திருத்தி விட்டேன்.
ஏதோ இந்த அளவு அவமானத்துடன் விட்டு விட்டீரே, அது வரைக்கும் மிக்க நன்றி.
ஜெயா.
Mar 03, 2009 @ 12:32:13
இது உங்கள் மனதை புண் படுத்தவோ உங்களை அவமான படுத்தவோ அல்ல .
உங்களின் மிக சிறப்பான படைப்புகளை மற்றவர்கள் தவறாக எண்ணிவிட கூடாது என்பதற்காகவே தங்களின் அறியா பிழையை சுட்டி காட்டினோம்.
மற்ற சில படைப்புகளிலும் ஆங்காங்கே பிழைகள் இருக்கின்றன . முடிந்தால் நேரம் கிடைக்கும் பொழுது மின்-தபால் மூலம் தெரிய படுத்துகிறோமே 😉
Mar 04, 2009 @ 09:57:57
தங்கள் தயவு, எனது பாக்கியம். தங்கள் பொன்னான(?!) நேரத்தை இதற்க்காக செலவழிப்பதை பெருமையாக எடுத்துக் கொள்கிறேன்.
மின் தபால் அனுப்பு அல்லது இதை போல் ஆங்காங்கே சுட்டினாலும் பெரிய இழப்பு ஒன்றும் ஏற்ப்படபோவதில்லை.
ஜெயா.
Mar 06, 2009 @ 13:29:09
Hey..me too same feelings.
Always dreamt of living with kings and queens…
I recently re-re-read ponniyin selvan..with the same enthu ;-))
BTW…Penmai-ke uriya potti poramai-kradha naan refute pannuren.
Sep 27, 2009 @ 19:15:25
// BTW…Penmai-ke uriya potti poramai-kradha naan refute pannuren //
Suganthi, Jeyavae prove pannitaanga 😉
// நந்தா, கல்கியின் வர்ணனை கற்பனை அழகிற்க்கு ரம்யா கிருஷ்ணனும் மீனாவும் இணையாவார்களா என்ன? சத்தியமாக எனக்கு அப்படி தோன்றவில்லை //
BTW.. nice post Jaya … after a long time, u made me to feel a lot about the book and the characters ( ofcourse, selected ) 😉 ippa thaan konja naal marnathu irunthen .. U cried for the death of Manthakini .. and I used to have the same feeling, whenever I complete the last lines of the book. Yes.. I am talking about the death of Manimekalai. The way it was narrated was amazing. That is the most heart breaking part for me in the book. Trust me, I did not even had the such level of feeling for Nandhini.
U cud find everything in this classic from politics, fun, romance, heroism, history etc., I used to laugh within myself, whenever I read the conversatoin b/w Vandhiyadevan and Kundhavai… it was described amazingly.. that too espescially when Kundavai tells our hero that Parthiban has asked for her to Sundara chozar and the king had inturn left the choice to herself.. and innocently our hero will ask that ” And what did the Kundavai reply to the king” …
Again.. as Nandha said, this commet shud not become bigger than the original post… Still I cud remember , how u and Suganthi tried to pull down my leg in the book club meeting regarding this topic 🙂
Oct 01, 2009 @ 02:33:33
True, selected characters are truly wonderful 🙂 Yes nandhini was never to be displayed as a symbol of sympathy, even though it was none of her fault that she became what she was. But in the case of manimekalai, the innocence of the girl hits u hard so u feel more for her…
Comment size ellaam eppo paarkka aarambiche nee? koochapadaathe podu 😉
Jaya.
Mar 09, 2009 @ 21:18:04
@சுகந்திஸ்
திஸ் இஸ் ரியல் தங்லிஷ்
Mar 10, 2009 @ 07:20:13
சுகந்தி, ஒரு எழுத்து நடையில எழுதிட்டேன் என்று நினைக்கிறேன், இப்போது மாற்றி விட்டேன்.
ஜெயா.
Sep 15, 2009 @ 14:48:50
Really fantastic. Thirambavum Ponniyin Selvan padicha madhiri irucku. You could become a writer. All the best. 🙂
Sep 16, 2009 @ 07:51:50
Thanks prema, anaal indha oru post ukke naan write aagalaam endru sonneega paarunga, neenga romba nallavanga list la irukkareenga 🙂
Jaya.
Sep 16, 2009 @ 12:46:43
உண்மையைச் சொல்லுங்க ஜெயா,
பிரேமலதா அப்படிச் சொல்லனுங்கிறதுக்காக நீங்க என்ன பண்ணீங்க????
இல்ல அந்த பிரேமலதாவே……………..
சும்மா உல்லுலாயிக்கு…..
Sep 30, 2009 @ 10:25:16
Dear Jaya,
I am sorry to write in English and adjust with my language, I dont know where to get tamil fonts and not used to tamil typing once upon a time learned but not practiced if u can suggest me if there is any way for tamil typing. And coming to the matter I too accept your view and
I read ponniyin selval so many times, and I do think in the same way. Especially when I laugh all of the sudden everybody will turn and see me and seeing me with book in hand they forgive me. I am having the chance of reading the book from the collection so its with the original drawing of maniam selvan’s its wonderful and each and every character is very nice and also i used to think this person mr kalki got this kind of humour such a nice writer giving justification for all characters and making us to think that they are good in their own way. Even Mandhagini’s daughter too got into this situation because of her deprive right.
Azhvarkadiyan Nambi can we jump like that with the kind of physic he had and also when he wants to divert the subject he always start a fight with vandhiyathevan ha ha what a pride vandhiyathevan had earlier when he visit first time to chola perarasu! like that only we are leading our life I think definitely we would have been in that period but not knowing what exactly we were would be.
And also maharaja’s job is so painful as you said Narasimha Varmar could not marry his beloved sivagami due to hisi position as maharaja and also they need to work for 24 hours continuously. And for raja they need 48 hours but for us for ordinary matters we need 48 hours and blobbering that this is not good that is not good. I am proud to born here and we have such a nice culture so learning this to the deepest and transforming that to our younger generation itself is the great work dear jaya. Loving every one in this world itself made us to feel like maharaja or maharani not necessary being a maharaja in real. this is what I think. Thanks for your comments and sharing your views
Enrendrum anbudan,
Gowri Manohari
(Ex Avignite your husband knows me I am prema’s elder sister.)
Oct 01, 2009 @ 02:37:50
Welcome Gowri,
If you are firefox, you could down this addon – thamilvisai – which enables you to type in tamil. It is simple, it is thanglish typing only – you type in english alphabets which gets converted to tamil letters. I first thought it was my friend gowri manohari, until you wrote you are venkat’s friend 🙂
Yes your feelings about the maharaas are very true. Vaazhkkai eppadi irundu irukkum andha kaalathil enbathu is nijamave oru interesting matter thaan 🙂
Jaya
Dec 23, 2009 @ 15:10:11
மிக்க நன்றி ஜெயா…
நானும் உங்களை மாதிரித்தான் இராஜராஜ சோழன் படத்தை டிவியில் பார்த்தபின் ஆர்வம் அதிகரித்து ப்ராஜக்ட் மதுரை திட்டத்தில் இருந்து ஆயிரத்து நானுறு சொச்ச பக்கததை முடிச்சுட்டு மத்த புத்தகத்தை தேடிட்டு இருக்கேன்… இத படிச்சுட்டு தஞ்சாவுருக்கும் போய்ட்டேன். இன்னமும் ஆர்வம் அடங்கல….
ராஜ ராஜ சோழன் எப்படி செத்தார்.. வந்தியத்தேவன் எப்படி இறந்தார் இப்படி ஆர்வம் இன்னமும் அதிகரிச்சுடுச்சு…
யாரிடமாவது இதுபற்றிய தகவல்கள் இருநதால் மின்னஞ்சல் அனுப்புங்கள்
Jan 29, 2010 @ 07:53:17
முரளி, ஆமாம் யாருக்காவது தெரிந்து இருந்தால் கண்டிப்பாக சொல்லுங்கள்.
ஜெயா.