நானும் அகிலும் கிண்டியை தாண்டி பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது, அண்ணா பல்கலைகழகத்தை காண்பித்து,

நான்: அகில் அதுதான், அண்ணா யுனிவர்சிட்டி, நீ அதில படிக்கறயா?

அகில்: அதில சின்ன பசங்க எல்லாம் படிக்கலாமா?

நான்: இல்லைமா, பெரிய பசங்க தான் அதில் படிக்க முடியும்… பெரியவனான பிறகு தான் சொல்லறேன்…

அகில்: அப்போ நீ அதில படியேன் அம்மா?

நான்: (அடப்பாவி, என்னால பண்ண முடியாததை தானே உன்னை பண்ண சொல்லறேன்…) அம்மா ஏற்க்கனவே படிச்சு முடிச்சுட்டேனே, படிச்சுட்டு தான் ஆபிஸ்ல வேலை செய்யறேன்… (அப்பா இப்போதைக்கு தப்பிச்சுட்டேன்…)

அகில்: ஓ சரி அம்மா.

ஜெயா.