ஆசை படத்தில் ஒரு பாடல் வரும், “மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே…” என்று. நானும் அகிலும் எங்க அம்மாவை குஷி படுத்த முதல் வார்த்தையை மட்டும் மாற்றி, “அம்மம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே…” என்று பாடிக் கொண்டு இருப்போம்.

நேற்று மாலை அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டு இருந்த போது, அகில் பாடியது – “விதுலா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே…” என்று. விதுலா நாங்கள் வேளச்சேரியில் இருந்த போது எங்கள் ஃப்ளாட்டிற்க்கு எதிர்த்த ப்ளாட்டில் இருந்த குட்டிப் பெண், அகிலின் முதல் தோழி, அவனை விட இரண்டு மாதமே பெரியவள். வெங்கட் ஆடிப்போய் விட்டார் அகில் பாட்டை கேட்டு, என்ன ஜெயா, இவன் வாரணமாயிரம் சூர்யா போல கிடாரோடுதான் தெருத் தெருவாக சுற்றுவான் போல இருக்கிறதே என்று அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார்.

ஏதோ நல்லா இருந்தா சரி 🙂

ஜெயா.