நான்: அகில் நாம இரண்டு பேரும் கூட ஆஸ்ட்ரேலியா போகலாமாடா?
அகில்: எதுக்கு அம்மா?
நான்: சும்மா சுத்தி பார்த்துட்டு வரலாம் டா, அப்பாதான் அங்கே இருக்கறாரே…
அகில்: இல்லம்மா, நான் என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட எல்லார்கிட்டேயும் ஆஸ்ட்ரேலியா போறோம் என்று சொன்னேனா, அவங்க எல்லாரும் அன்னைக்கு கேட்டாங்க நாங்களும் வரோம் என்று, நானும் சரி என்று சொல்லிட்டேன். ஆனா இப்போ எல்லாரும் போகறது கஷ்டமா இருக்கும் இல்ல, எப்படி எல்லாரும் போக முடியும், அதனால நாமளும் போக வேண்டாம் அம்மா…
அட தர்மதாதா பிரபுவே, ஆஸ்ட்ரேலியாவிற்க்கு உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிக்கிட்டு போகறது என்றால் என்ன என்று தெரியுமாடா? பேங்க் பேலன்ஸில் ஒரு துண்டு விழாது, ஒரு பெட்ஷீட்டே விழும்…முளைச்சு மூனு இலை விடல, அதுக்குள்ள ஃப்ரண்ட்ஸ், அதுல அவங்கள விட்டுட்டு வேற வர முடியாது என்று டையலாக்… எங்கே போய் முடியப் போகுதோ?
ஜெயா.
Leave a Reply