விடியற்காலையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தாலும் மனசு வாலை சுருட்டிக்கொண்டு போர்வைக்குள் படுத்து இருக்குமா?
தெரிந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குழந்தைகள் பேட்டர்னை ஆராய்ச்சி செய்த போது –
முதலில் பெண்குழந்தை பெற்றவர்கள் – அடுத்தது ஆண் குழந்தை பிறந்து இருப்பதற்க்கான வாய்ப்புகள் நிறையவாக இருக்கின்றது – அரவிந்த், ராதை, வரா அக்கா, சங்கீ,
இரண்டுமே பெண்குழந்தையாகவும் சிலர் – கேரன், ராஜி, கோமதி, (நோட்: முதல் குழந்தை பெண், ரோட்டில் டிரஸை கிழித்துக் கொண்டு அலையபோகிறேன் என்று நல்லா தெரியுது..)
முதலில் ஆண் குழந்தை பெற்ற அபாக்கியசாலிகளுக்கு அடுத்தது 99% ஆண் குழந்தைகள்தான் பிறந்து இருக்கின்றது – உமா, வித்யா, ஷோபா, வினோத், சைலேஷ், ஷர்மிளா, சாருலதா, சித்ரா, இப்படியாக இந்த லிஸ்டில் தான் அதிகம் பேர்…
முதல் ஆண், பின்னர் பெண் – இந்த லிஸ்ட் இருப்பதிலே சின்னதாக இருப்பது தான் சோகம். .. யோசித்து யோசித்து பார்க்கிறேன் – சங்கீதா, ராஜி அக்கா, இதற்க்கு மேல் லிஸ்ட் வளர மாட்டேங்குது…
மத்தவங்க எல்லாரும் அநியாயத்திற்க்கு ஒரு குழந்தையோட நிறுத்திவிட்டார்கள்… என்ன பண்ணுவது? சே நம்ம ஆராய்ச்சியை அடுத்த லெவலுக்கு எடுத்துக்கிட்டு போக விடமாட்டாங்க போலவே…
இந்த பையன் குழந்தைகள் பிறக்கும் போதே மேல் ஷாவனிசத்தோட பொறக்குதோ, அடுத்ததா ஒரு பொண்ணு வந்தா நம்ம சுகந்திரம், செல்லம், தான் தோன்றித்தனம் எல்லாம் பறி போயிடும் என்று எதோ ஃப்ராடுத்தனம் பண்ணிடுதுங்க என்று நினைக்கிறேன். எப்படியும் பொண்ணு நல்ல பொண்ணு மாதிரி நடிச்சாவது, எப்போவும் அப்பா அம்மாகிட்ட நமக்கு திட்டுதான் வாங்கித் தரப்போகுது, அண்ணாவா இருந்து அதை வேற பொறுப்பா பார்த்துக்க சொல்லுவாங்க, படிப்புல வேற நல்ல மார்க் வாங்கி தொலைக்கும், பாரு உன் தங்கச்சியா இருந்தா கூட என்ன மார்க் வாங்கி இருக்கு, நீயும் வாங்கி இருக்கியே அதில பாதி என்று ஒவ்வொரு பரிட்சைக்கும் திட்டு விழும். அதுக்கு பேசாம இன்னொன்னு நம்மளை மாதிரியே பொறந்தா – பண்ற திருட்டுத்தனங்கள்ல்ல கூட்டு களவாணியாவும் சேர்த்துக்கலாம், கைக்கு அடக்கமாகவும் இருக்கும், எதுக்கு எடுத்தாலும் நம்மை பார்த்து படிச்சுக்க சொல்லுவாங்க, ரொம்ப நல்லா படிச்சு நம்மளை பீட் பண்ற சான்ஸும் கம்மி, சோ குழப்பம், கூச்சல், சச்சரவு இல்லை…
இதே பெண் குழந்தைகள் பார்த்தீங்கன்னா, சின்ன வயசிலேயே ரொம்ப நல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்க, ஒரு தம்பி பாப்பா அடுத்தது பொறந்தாலும் அதை வைச்சு மேய்க்கும் அளவிற்க்கு பொறுமைசாலிங்க. அப்படியே விஷயம் கை மீறீ போச்சு என்றாலும் அம்மா கிட்ட சொல்லிடுவேன் என்று ஒரு டையலாக்கில் ஆட்டம் போடற தம்பியை அடக்கி வைக்க தெரிஞ்சவங்க. அதனால தான் நிறைய வீட்டில பொண் குழந்தைக்கு அப்புறமா பையன் குழந்தைகள் பிறந்திருக்கு என்று ஒரு புது அறிவியல் கண்ணோட்டத்தை உங்களுக்கு சொல்லறேன்…
பத்தாவது, பன்னிரண்டாவது, அடங் காலேஜ் பரிட்சைக்கு கூட நான் இப்படி பாயை பிராண்டிக் கொண்டு யோசிச்சு இருக்க மாட்டேன்… இதுல வேற முடிக்காத எம்.சி.ஏ ல புள்ளியியல்ல வேற அரியர், இப்படி இருக்கற நானே இது மாதிர் புள்ளிவிவரங்களில் சேகரிச்சுகிட்டு அலையறேன் என்றால் என் பைத்தியம் எந்த அளவிற்க்கு முத்தி போய் இருக்கு என்று நீங்க சொல்லவே தேவையில்லை… நானே நல்ல டாக்டரா பார்த்து வைத்தியம் பார்த்துக்கறேன்…
ஜெயா.
Sep 16, 2009 @ 06:55:21
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….
ஜெயா இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை.
Sep 16, 2009 @ 07:03:53
கலக்கலான அனலிசிஸ் ஜெயமாலினி அக்கா. சோ உங்களுக்கு பெண்குழந்தை மேல ஆசை அதிகம் .I wish to Have a girlbaby .
Sep 16, 2009 @ 07:06:01
ஜெயா,
எங்க வீட்டுல 4 பயலுங்க, 2 பொண்ணுங்க. ஆனா நாங்க எல்லாரும் பொருப்பா தான் எங்க தம்பிகள பார்த்திண்டு இருந்தோம்.பசங்களுக்கும் பொருப்பு உண்டு .
Sep 16, 2009 @ 07:47:51
நந்தா: நீங்க போஸ்ட்டை சொல்லறீங்களா இல்லை தலைப்பை சொல்லறீங்களா? 🙂
@பூவரசா: நீ என்ன சொல்ல வர்ற? எனக்கு பெண் குழந்தை பிறக்கனும் என்று ஆசை படறீயா, இல்லை உனக்கு பிறக்கனும் என்றா? இரண்டாவதா இருந்தா…. ரொம்ப சீக்கிரம் டா இதை எல்லாம் யோசிக்க, இரு சாரதி கிட்ட சொல்லறேன் 🙂
ஆனந்த்: உங்க வீடு ஒரு எக்ஸப்ஷனா இருப்பது போல எங்க வீடும் ஆகக் கூடாதா? பொறுத்து இருந்து பார்ப்போம்…
ஜெயா.
Sep 16, 2009 @ 12:49:44
//நீங்க போஸ்ட்டை சொல்லறீங்களா இல்லை தலைப்பை சொல்லறீங்களா?
//
எல்லாந்தான்…..
உங்க ஊட்டுக்காரரை பாய் விக்குற கடையில பாத்ததா சொன்னப்ப கூட இப்படி ஒரு காரணம்னு நினைக்கலை….
ஆனா பாவம் அவரு, கடைசியா வாங்குறப்ப, எக்ஷ்ட்ராவா ரெண்டு கொடுத்திடுங்கன்னு வாங்கிட்டு போனாரு (இப்ப எனக்கு ஏன்னு புரியுது)………
Sep 18, 2009 @ 17:47:17
ஜெயா ,
ரெண்டுமே ஆண் இல்ல ரெண்டும் பெண் பிள்ளையா இருந்தா கண்டிப்பா சண்டை போட்டுப்பாங்க . ஒரு ஆண் ஒரு பெண் இருந்தா ரொம்ப ஒற்றுமையா பாசமா இருப்பாங்க அப்படிங்கறது என்னோட எண்ணம் . அதனால உங்களுக்கு பெண் குழந்தை பொறக்கணும்னு ஆண்டவன வேண்டிக்கிறேன். உங்க ஆஸ்திக்கு ஒன்னு உங்க ஆசைக்கு ஒன்னு ( இப்ப இந்த பழமொழி ஒத்து வராது தான் இருந்தாலும் சொல்றேன் ).
இப்படிக்கு,
முத்து.
Sep 19, 2009 @ 03:22:23
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி முத்து…
உங்க எண்ணம் பலிச்சுது என்றால் ஒரு பாதாம் ஸ்வீட்டும் முந்திரி ஸ்வீட்டும் வாங்கி மிக்ஸ் பண்ணி உங்க வாயில போடறேன் 🙂
ஜெயா.
Sep 25, 2009 @ 08:53:25
Jaya, finding reasons to prove chauvinism by birth is height of feminism (stats fiction) 🙂
Wish you girl baby for the goodness of akhil from being victimised
PS: உங்க புள்ளியியல் paper’ah திருத்தினவன் ஒரு தீர்க்கதரிசி 🙂
Sep 30, 2009 @ 11:38:00
Hi Jaya,
Contact me in my mail id if possible or chat with me at gowhari_pg@yahoo.com for you to suggest about pen pillai my mom may guide you.. U know v are five sisters i think she is the expert for you to suggest.
Sep 30, 2009 @ 11:44:07
Hi Jaya,
What u got delivered a baby if so what baby? Forget that u r carrying I have suggested you to call me any way Nice reading your blogs. And tell me about your delivery date. Also I am also a libran who is talketive and also cool listener.
Thanks alot,
yendrendrum anbudan,
Gowri Manohari.
Oct 01, 2009 @ 02:25:34
yes sure gowri, will call you up. My delivery dates are supposed to be between 5th of october to 8th october. will know only in the next check up which falls in a couple of days.
Will add your id to yahoo chat list too. Unga amma pathi details munnaadiye theriyaama pochu… ippothaikku kettu onnum prayajonamum illai 🙂
Nice to know you enjoyed reading my blogs. will sure keep in touch.
Jaya.
Oct 07, 2009 @ 08:48:45
Hi Jaya,
Neenga Ninaicha Mathiriye Girl Baby Piranthatharkku vazhthukkal
Oct 07, 2009 @ 11:30:48
உங்களுக்கும் உங்கள் பெண் குழந்தைக்கும் என் வாழ்த்துக்கள்
subarayan
Oct 07, 2009 @ 15:29:25
வாழ்த்துக்கள் ஜெயா.
//உங்க எண்ணம் பலிச்சுது என்றால் ஒரு பாதாம் ஸ்வீட்டும் முந்திரி ஸ்வீட்டும் வாங்கி மிக்ஸ் பண்ணி உங்க வாயில போடறேன்//
சொன்னத நிறைவேத்துவீங்கேனு நம்புறேன்.
முத்து
Oct 07, 2009 @ 16:18:42
வாழ்த்துக்கள் ஜெயா!!!
அகில் பாடு கொண்டாட்டம்:))))))
Oct 15, 2009 @ 14:26:03
எல்லோர் வாழ்த்துக்களுக்கு நன்றி… முத்து கண்டிப்பா… உனக்கு இல்லாத ஸ்வீட்டா?
அகில் பாடு இப்பொதைக்கு கொண்ட்டாட்டமா இருக்கு… போக போக பார்க்கனும்..
ஜெயா.