விடியற்காலையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தாலும் மனசு வாலை சுருட்டிக்கொண்டு போர்வைக்குள் படுத்து இருக்குமா?

தெரிந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குழந்தைகள் பேட்டர்னை ஆராய்ச்சி செய்த போது –

முதலில் பெண்குழந்தை பெற்றவர்கள் – அடுத்தது ஆண் குழந்தை பிறந்து இருப்பதற்க்கான வாய்ப்புகள் நிறையவாக இருக்கின்றது – அரவிந்த், ராதை, வரா அக்கா, சங்கீ,

இரண்டுமே பெண்குழந்தையாகவும் சிலர் –  கேரன், ராஜி கோமதி, (நோட்: முதல் குழந்தை பெண், ரோட்டில் டிரஸை கிழித்துக் கொண்டு அலையபோகிறேன் என்று நல்லா தெரியுது..)

முதலில் ஆண் குழந்தை பெற்ற அபாக்கியசாலிகளுக்கு அடுத்தது 99% ஆண் குழந்தைகள்தான் பிறந்து இருக்கின்றது – உமா, வித்யா, ஷோபா, வினோத், சைலேஷ், ஷர்மிளா, சாருலதா, சித்ரா, இப்படியாக இந்த லிஸ்டில் தான் அதிகம் பேர்…

முதல் ஆண், பின்னர் பெண் – இந்த லிஸ்ட் இருப்பதிலே சின்னதாக இருப்பது தான் சோகம். .. யோசித்து யோசித்து பார்க்கிறேன் –  சங்கீதா, ராஜி அக்கா, இதற்க்கு மேல் லிஸ்ட் வளர மாட்டேங்குது…

மத்தவங்க எல்லாரும் அநியாயத்திற்க்கு ஒரு குழந்தையோட நிறுத்திவிட்டார்கள்… என்ன பண்ணுவது? சே நம்ம ஆராய்ச்சியை அடுத்த லெவலுக்கு எடுத்துக்கிட்டு போக விடமாட்டாங்க போலவே…

இந்த பையன் குழந்தைகள் பிறக்கும் போதே மேல் ஷாவனிசத்தோட பொறக்குதோ, அடுத்ததா ஒரு பொண்ணு வந்தா நம்ம சுகந்திரம், செல்லம், தான் தோன்றித்தனம் எல்லாம் பறி போயிடும் என்று எதோ ஃப்ராடுத்தனம் பண்ணிடுதுங்க என்று நினைக்கிறேன். எப்படியும் பொண்ணு நல்ல பொண்ணு மாதிரி நடிச்சாவது, எப்போவும் அப்பா அம்மாகிட்ட நமக்கு திட்டுதான் வாங்கித் தரப்போகுது, அண்ணாவா இருந்து அதை வேற பொறுப்பா பார்த்துக்க சொல்லுவாங்க, படிப்புல வேற நல்ல மார்க் வாங்கி தொலைக்கும், பாரு உன் தங்கச்சியா இருந்தா கூட என்ன மார்க் வாங்கி இருக்கு, நீயும் வாங்கி இருக்கியே அதில பாதி என்று ஒவ்வொரு பரிட்சைக்கும் திட்டு விழும். அதுக்கு பேசாம இன்னொன்னு நம்மளை மாதிரியே பொறந்தா – பண்ற திருட்டுத்தனங்கள்ல்ல கூட்டு களவாணியாவும் சேர்த்துக்கலாம், கைக்கு அடக்கமாகவும் இருக்கும், எதுக்கு எடுத்தாலும் நம்மை பார்த்து படிச்சுக்க சொல்லுவாங்க, ரொம்ப நல்லா படிச்சு நம்மளை பீட் பண்ற சான்ஸும் கம்மி, சோ குழப்பம், கூச்சல், சச்சரவு இல்லை…

இதே பெண் குழந்தைகள் பார்த்தீங்கன்னா, சின்ன வயசிலேயே ரொம்ப நல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்க, ஒரு தம்பி பாப்பா அடுத்தது பொறந்தாலும் அதை வைச்சு மேய்க்கும் அளவிற்க்கு பொறுமைசாலிங்க. அப்படியே விஷயம் கை மீறீ போச்சு என்றாலும் அம்மா கிட்ட சொல்லிடுவேன் என்று ஒரு டையலாக்கில் ஆட்டம் போடற தம்பியை அடக்கி வைக்க தெரிஞ்சவங்க. அதனால தான் நிறைய வீட்டில பொண் குழந்தைக்கு அப்புறமா பையன் குழந்தைகள் பிறந்திருக்கு என்று ஒரு புது அறிவியல் கண்ணோட்டத்தை உங்களுக்கு சொல்லறேன்…

பத்தாவது, பன்னிரண்டாவது, அடங் காலேஜ் பரிட்சைக்கு கூட நான் இப்படி பாயை பிராண்டிக் கொண்டு யோசிச்சு இருக்க மாட்டேன்… இதுல வேற முடிக்காத எம்.சி.ஏ ல புள்ளியியல்ல வேற அரியர், இப்படி இருக்கற நானே இது மாதிர் புள்ளிவிவரங்களில் சேகரிச்சுகிட்டு அலையறேன் என்றால் என் பைத்தியம் எந்த அளவிற்க்கு முத்தி போய் இருக்கு என்று நீங்க சொல்லவே தேவையில்லை… நானே நல்ல டாக்டரா பார்த்து வைத்தியம் பார்த்துக்கறேன்…
ஜெயா.