அகில் ஏதாவது குறும்புத்தனம் செய்தால், முடிந்த வரை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவேன், ஆனாலும் சில சமயம் திட்டு வாங்கும். ஆனாலும் கொஞ்ச நேரத்தில் சமாதானம் ஆகி விடுவோம். சமாதானம் ஆன பிறகு, அல்லது கொஞ்ச நேரம் கழித்து நான் சொல்லுவேன், “அகில், அம்மாவிற்க்கு அகிலை ரொம்ப பிடிக்கும், ஆனா இந்த மாதிரி ஏதாவது செய்யும் போது கோபம் வந்திடும், ஆனாலும் அகில் தான் அம்மாவிற்க்கு செல்லம்.”

இன்றைக்கு அகில் என்னிடம் சொல்லியது – “அம்மா நீ அப்போ அப்போ என்னை திட்டினாலும், எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்…”

நேரமடா சாமி 🙂

ஜெயா.