பைக்கில் நானும் அகிலும் போய் கொண்டு இருந்த போது அகில் சொன்ன கதை…

“சஜ்ஜு கிளாஸ்ல பேசிக் கிட்டே இருந்தான். அதனால ஆன்ட்டி வந்து அவனை கீழ போய் பிரி. கே.ஜி ல உக்கார சொல்ல்ட்டாங்க…  நான் ஒன்னுமே பண்ணலை, சும்மா அவன் போகும் போது அவனுக்கு பை பை சொன்னேன், அத பார்த்த ஆன்ட்டி, நீ போகிறவனுக்கு என்ன பை சொல்லறது, நீயும் அவன் கூடவே போய் உக்காந்துக்கோ என்று சொல்லி அனுப்பி வைச்சுட்டாங்க… ரெண்டு பேரும் கிழே போய் உக்காந்துகிட்டோம்..”

கேட்ட எனக்கு அநியாய சிரிப்பு வர, வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, இரண்டு தரம் இதே கதையை கேட்டு ஒரு ஐந்து நிமிஷம் சிரித்துவிட்டு கிளம்பினோம்.

ஜெயா.