புலம்பல்கள்…

Leave a comment

சே இந்த பொண்ணுங்களே இப்படிதானா?

வாயை தொறந்தா மூட மாட்டேங்கறாங்களே…

பார்க்கறத்துக்கு மட்டும்தான் அழகு இருக்காளுங்க, மிச்சதெல்லாம் விஷம்…

ஓவரா பண்ணதுங்க?

எப்படித்தான் இதுங்களை எல்லாம் சமாளிக்கறானுங்களோ?

இந்த பொண்ணுங்க என்ன நினைக்குதுங்க, என்ன சொல்ல வருதுங்கன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குதே…

பையனுங்களை டார்ச்சர் பண்றதையே பொழப்பா வைச்சு இருக்குமோ?

இது எல்லாம் புதுசா காதல்ல விழுந்த பசங்களோட புலம்பல் என்று மட்டும் தப்பா நினைச்சுக்காதீங்க, (இன்னும் ஒரு பத்துநாள்ள ஒரு வயசை தொடபோகும் ) பொண்ணை பெத்து இருக்கும் அப்பாவின் புலம்பல்தாங்க.. அதிலயும் கடைசி தான் இன்னும் சூப்பர்..

ஊர்ல அவனவன் ஒரு பையனை மட்டும் பெத்துட்டு சந்தோஷமா இருக்கானுங்க, நான் இந்த ரெண்டு பொண்ணுங்களை மேய்க்கறத்துக்குள்ள படற பாடு இருக்கே…

ஜெயா.

அந்த ரெண்டு பொண்ணுங்கள்ள ஒன்னு நானுங்கோ 🙂

ஆச்சர்ய குறி!

Leave a comment

அனன்யாவின் காதுகுத்தல் நிகழ்ச்சிக்காக கும்ப கோணம் சென்றிருந்த நாங்கள் அப்படியே  தஞ்சை பெரிய கோவிற்க்கும் சென்றோம். குடும்பம் முழுவதும் பக்தியோடு கோவிலுக்குள் நின்றிருக்க, கூட்டத்தை பார்த்த நானும் அகிலும் மெதுவாக அங்கே இருந்து நழுவி கோவிலை சுற்றி வரலாம் என்று நடக்க ஆரம்பித்தோம். வெளி பிரஹாரமே கண்ணை கொள்ளை கொள்ளும் அழகோடு இருந்தது, நிறைய லிங்கங்கள், மற்றும் பல தெய்வ உருவங்கள், சுவரோவியங்கள் என்று வரிசையாக இர்ந்தது. சுவரோவியங்கள் முழுதும் சிவபுராண கதைகளாக இருக்க வேண்டும், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், வரைந்து பல காலம் ஆனதாலும் சரியாக புரிந்து கொள்ள முடியாதவாறுதான் இருந்தன. அதிலும் நம் ஊர் குரங்குள் அதில் தங்கள் பேரை பிரபு என்றும் மும்தாஜ் என்றும் எழுதி இருந்ததை என்ன என்று திட்டுவது…

இருந்தாலும் அகில், அம்மா இந்த ஸ்டோரி சொல்லும்மா என்று கேட்க, நானும் நமக்கு தெரிகிறதோ இல்லை, பரவாயில்லை என்று ஒரு படத்துக்கும் மற்றோரு படத்துக்கும் சும்மா தொடர்பு இருக்கின்றாற்போல் சொல்ல ஆரம்பித்தேன். “இங்கே ஒரு ராஜா இருந்தாராம், அங்கே ஒரு லிங்கம் இருந்தததாம், (அடுத்த படம்) அந்த ஊரில் ஒரு பெண் இருந்தாளாம், அவளுக்கு ஒரு குழந்த்தை இருந்ததாம் அங்கேயும் ஒரு லிங்கம் இருந்ததாம்… (அடுத்த படம்) ஒரு குதிரை அங்கே வந்ததாம், அது மேலே ஒரு ராஜா இருந்தாராம் (அடுத்த படம்) அப்படியாக ஒரு கதையா அல்லது பல கதைகளா என்று தெரியாத வண்ணம் கதை சொல்லிக் கொண்டு வந்தேன்..

ஒரு இருபது படம் தள்ளியபின், குழந்தை என்னிடம் கேட்டது – “இந்த லிங்கத்துக்கு, இவ்வளவு நடந்ததாம்மா??” நீங்கள் அகிலிடம் ஒருதரம் பேசி இருந்தால், அது எந்த எக்ஸ்பிரஷினில் இதை கேட்டு இருக்கும் என்று யூகிக்க முடியும் 🙂 எனக்கு ஒரே சிரிப்பு, அவனிடம் சொன்னேன், “டேய், இந்த லிங்கத்துக்கு தை விட நிறைய நடந்து இருக்கு, அதனாலதான் அதுக்கு, இந்த ராஜா இவ்வளவு பெரிய கோவில் எல்லாம் கட்டி வைச்சு இருக்கார், இன்னும் நிறைய கோவிலுக்கு போனா, இன்னும் கூட நிறைய கதைகள் இருக்கு”அப்படியா என்று கேட்டு தலையை ஆட்டிக் கொண்டு வந்தது, ஆனாலும் அது கேட்டதை இன்னும் பல வருடங்களுக்கு மறக்க மாட்டேன்..

ஜெயா.

ஜாலியோ ஜாலி

Leave a comment

இன்று வெங்கட்டிற்க்கு விடுமுறை, நாராயண் மூர்த்தி அவர்களின் குலதெய்வம் கிருஷணரோ என்னமோ இன்ஃபோஸிஸ் கிருஷண ஜெயந்திக்கு விடுமுறை.. எனகக்கும் அகிலுக்கும் – வேலை மற்றும் பள்ளி.

அகிலை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்த போது, வெங்கட் வந்து,

“இன்னைக்கு எனக்கு லீவு, இன்னைக்கு எனக்கு லீவு..” என்று குழந்தையை போல சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார்… அகிலை வெறுப்பேற்றுகிறாராம்… நானோ ஒரு முறை, இப்போது இதுவும் பள்ளிக்கு போகமாட்டேன் என்றால் என்ன பண்ணுவது என்று.

“அப்பா, எனக்கு ஸ்கூலுக்கு போவதற்க்கு பிடிக்கும், அங்கே போய்தான் நான் கலரிங் பண்ணுவேன், பூமில இருக்கற எல்லா டான்ஸையும் பிக்சர் பார்த்து கலரிங் பண்ணுவேன், வொர்க்ஷீட்ஸ் எழுத்வேன். அதனால நான் வந்து ஜாலியா ஸ்கூலுக்கு போறேன். வீடுதான் போர் அடிக்கும்…”

வெங்கட்டின் முகத்தை பார்க்க முடியவில்லை 🙂 நானோ சத்தம் போட்டு சிரித்து வேறு வெறுப்பேற்றினேன்.படுக்கையில் இருந்து துள்ளி குதித்து எழுந்து ஓடியது கிளம்ப…

பின்ன ஹாலுக்கு வந்து என் அம்மாவிடம் அக்காவிடமும் சொல்ல ஆரம்பித்தேன்..

“அம்மா, வெங்கட் காலங்கார்த்தால அகில் கிட்ட இருந்து ஒரு பெரிய பல்ப் வாங்கினார்…”

பல் தேய்க்க ஆரம்பித்து இருந்த குழந்தை வந்து படு சீரியசாய் சொன்னது,

“அப்பா, எனக்கு பெரிய பல்ப் வேண்டாம், சின்ன பல்ப் இருக்குமில்ல, நடுவில வையர் போட்டு தொங்க விடலாம் இல்ல, அது போல ஒன்னுதான் வேணும் பா…”

முதலில் வெங்கட் முகம் கொடுமையாக இருநந்து என்றால் இப்போது கோரமாக இருந்தது 🙂

ஜெயா.

ஹைடெக் காற்றாடி

Leave a comment

போன வாரம் கடற்க்கரையில் காற்றாடி விட கிளம்பினோம். வாசகர்களின் இனிய கவனத்திற்க்கு: அது ஹாங்காங்கில் வாங்கிய காத்தாடி 🙂 ஆந்தையின் வடிவில் செய்த பிளாஸ்டிக் காற்றாடி. கூடவே நைலான் கயிறு ஒரு ஐம்பது மீட்டர், அழகிய பிளாஸ்டிக் கைப்பிடியில் சுற்றி வைத்து இருந்தது. நூல் தானாக வெளிவராமல் ஒரு லாக் வேறு. ஆக மொத்தம் ஒரு ஹைடெக் காத்தாடி என்று வைத்துக் கொள்ளுங்களேன்…

நாங்கள் போன நேரம் காற்று ரொம்பவும் குறைவாக இருந்தது.. சரி பரவாயில்லை என்று கஷ்டப்பட்டு மேலெ ஏற்றி விட்டுக் கொண்டு இருந்தோம்.  அகிலின் பெரியம்மா மேலே எற்றி, கொஞ்ச நேரம் நூல் விட்டுக் கொண்டு இருக்க, அகில் கேட்கிறது பெரியம்மாவிடம்,

“பெரியம்மா, கிவ் மீ தி ஆப்பரேட்டர்…”

நாங்கதான் அப்போவே சொன்னோமில்ல, அது ஹைடெக் காற்றாடி என்று 🙂

ஜெயா.

முதல் கனவே… முதல் கனவே…

Leave a comment

இரண்டொரு நாட்களுக்கு முன், பின்னிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் அகிலின் குரல் – சஜ்ஜூ, சஜ்ஜு…

கனவில் ஏதோ பள்ளிக் காட்சி ஓடிக்கொண்டு இருந்ததோ என்னவோ தெரியவில்லை, இரண்டு தரம் அவன் பெயரை அதட்டி கூப்பிட்டு விட்டு திரும்ப தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டது குழந்தை 🙂

நல்லவேளை மேரி மேரி என்றோ, அல்லது அபிநயா அபிநயா என்றோ சொல்லவில்லை, என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான் 🙂

ஜெயா.