இன்று வெங்கட்டிற்க்கு விடுமுறை, நாராயண் மூர்த்தி அவர்களின் குலதெய்வம் கிருஷணரோ என்னமோ இன்ஃபோஸிஸ் கிருஷண ஜெயந்திக்கு விடுமுறை.. எனகக்கும் அகிலுக்கும் – வேலை மற்றும் பள்ளி.
அகிலை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்த போது, வெங்கட் வந்து,
“இன்னைக்கு எனக்கு லீவு, இன்னைக்கு எனக்கு லீவு..” என்று குழந்தையை போல சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார்… அகிலை வெறுப்பேற்றுகிறாராம்… நானோ ஒரு முறை, இப்போது இதுவும் பள்ளிக்கு போகமாட்டேன் என்றால் என்ன பண்ணுவது என்று.
“அப்பா, எனக்கு ஸ்கூலுக்கு போவதற்க்கு பிடிக்கும், அங்கே போய்தான் நான் கலரிங் பண்ணுவேன், பூமில இருக்கற எல்லா டான்ஸையும் பிக்சர் பார்த்து கலரிங் பண்ணுவேன், வொர்க்ஷீட்ஸ் எழுத்வேன். அதனால நான் வந்து ஜாலியா ஸ்கூலுக்கு போறேன். வீடுதான் போர் அடிக்கும்…”
வெங்கட்டின் முகத்தை பார்க்க முடியவில்லை 🙂 நானோ சத்தம் போட்டு சிரித்து வேறு வெறுப்பேற்றினேன்.படுக்கையில் இருந்து துள்ளி குதித்து எழுந்து ஓடியது கிளம்ப…
பின்ன ஹாலுக்கு வந்து என் அம்மாவிடம் அக்காவிடமும் சொல்ல ஆரம்பித்தேன்..
“அம்மா, வெங்கட் காலங்கார்த்தால அகில் கிட்ட இருந்து ஒரு பெரிய பல்ப் வாங்கினார்…”
பல் தேய்க்க ஆரம்பித்து இருந்த குழந்தை வந்து படு சீரியசாய் சொன்னது,
“அப்பா, எனக்கு பெரிய பல்ப் வேண்டாம், சின்ன பல்ப் இருக்குமில்ல, நடுவில வையர் போட்டு தொங்க விடலாம் இல்ல, அது போல ஒன்னுதான் வேணும் பா…”
முதலில் வெங்கட் முகம் கொடுமையாக இருநந்து என்றால் இப்போது கோரமாக இருந்தது 🙂
ஜெயா.
Leave a Reply