சீசனுக்கு ஒரு கிறுக்கு என்ற கொள்கையில் இப்போது வந்திருக்கும் கிறுக்கு புத்த மதம். அதன் தொடர்பாக ஒரு புத்தகமும் படித்துக் கொண்டு இருப்பதால், வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாம், புத்தர், நடு வழி, முக்தி, Awareness, Monastery மட்டும்தான்.

நேற்று காலை நான், எனது அக்கா, வெங்கட் எல்லோரும் பேசிக் கொண்டு இருந்த போது, புத்தர் பெரும்பான்மையாக பயன்படுத்திய பாலி மொழியை பற்றிய பேச்சு வந்தது. எப்படி பழங்காலத்தில் பாலி மொழி வழக்கத்திலிருந்தது எனவும், சமஸ்கிருததத்தையும் பற்றி பேசிக் கொண்டு இருந்த போது,

“பாலியும் சமஸ்கிருதமும் கொஞ்சம் மாறுபடும். சமஸ்கிருத்ததில் இருக்கும் ர என்ற எழுத்து பாலியில் கிடையாது. சமஸ்கிருதத்தில் ‘தர்மா’ என்று இருந்தால் அது இங்கே ‘தம்மா’ என்று இருக்கும்…” எனது அக்காவின் கண்டு பிடிப்பு இது..

அருகில் அமர்ந்து இருந்த அகில் அடுத்த நொடியில் பதில் கேள்வி கேட்டது,

“அப்போ ‘குர்மா’ வை எப்படி சொல்லுவாங்க?”

வெடிச்சிரிப்பின் இடையே எனது அக்கா சொன்ன “கும்மா” யார் காதிலும் விழவில்லை.

ஜெயா.