நிறைய நாட்களுக்கு பின் ஒரு அகில் பதிவு..

அகில், உனக்கு தெரியுமா, குரங்கில் இருந்து தான் மனுஷங்க வந்து இருக்காங்க… அப்படின்னா, நீ கூட எப்போ ஒரு தரம் குரங்கா இருந்து இருக்கே.. அப்புறமாதான் பாப்பாவா வந்து பொறந்து இருக்கே..  ஆனா இந்த மனுஷ குரங்கு தான், இந்த பூலோகமே நம்மளது என்று நினைச்சுக்குதாம்.. எல்லா குரங்கையும் விட அவந்தான் பெட்டர் என்று நினைச்சுக்குதாம்.. ஒருத்தரோடு ஒருத்தர் சண்டை போட்டுக்குதுதாம்… (எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தத்துவம் இருக்கனும் பார்த்துக்கோங்க…)

குழந்தையின் பதில்: நான் கூடவா குரங்கா இருந்தேன்..

நான்: ஆமாம், எல்லாருமே குரங்கில இருந்துதான் வந்து இருக்கோம்… என்ன பாதி பேர் இன்னும் குரங்காவே இருக்காங்க, நாம எல்லாம் மனுஷரா மாறிட்டோம்..

குழந்தை: அம்மா நான் குரங்கா இருந்த போது எடுத்த போட்டோ இருக்கா?? (சீரியஸான கேள்வி)

டேய்…….. இப்போதானேடா சொன்னேன், மனுஷ குரங்கு மட்டும் தான் பல வேலை பண்ணுது, அதில ஒன்னு போட்டோ எடுத்துக்கறது… நிஜ குரங்கு மரத்தில மட்டும் தானேடா தொங்கும்..

புரிந்துகொண்ட விஷமமான சிரிப்பே பதில் 🙂 நல்ல வேளையாக, நான் குரங்கா இருந்த போது மனுஷ குரங்கு என்னை போட்டோ எடுக்கலையா என்று பதில் கேள்வி கேட்கவில்லை…

ஜெயா.